இந்தியாவில் அதிக ஏழைகள் உள்ள மாநிலம் பீகார் – Daily Current Affairs 27 November 2021!
தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ்
- தென்னாப்பிரிக்காவில் வேகமாக பரவிவரும் உருமாறிய ஓமைக்ரான் வகை கொரோனா வைரஸ்.
- இது தற்போதைய வைரசை காட்டிலும் 40 விதமான மரபணு மற்றம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
- மேலும் இது தடுப்பூசியின் திறனை 40 சதவீதம் வரை குறைக்கும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதிக ஏழைகள் உள்ள மாநிலம் பீகார்
- நிதி ஆயோக் வெளியிட்டுள்ள வறுமைக்குறியீட்டு பட்டியலின் முதலிடத்தில் பீகார் மாநிலம் உள்ளது.
- பீகாரில் இருக்க கூடிய மக்களில் நூற்றுக்கு 51.91% பேர் ஏழைகளாக உள்ளனர்.
- சுகாதாரம், கல்வி, வாழ்க்கை தரம் இத்தகைய காரணிகளை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாநிலங்கள்-ஏழைகளின் சதவீதம்
1) ஜார்கண்ட்- 42.16%
2) உத்திர பிரதேசம்- 37.79%
3) கேரளம்- 0.71%
இந்தியாவில் 5 ஜி சோதனை
- வோடபோன் ஐடியா நிறுவனம் 5ஜி சோதனையை இந்தியாவில் நேற்று நடத்தியது. இதன் வேகம் 4.2Gbps வரை எட்டியது.
- இந்த வோடபோன் ஐடியா நிறுவனமானது எரிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து புனேயிலும், நோக்கியாவுடன் இணைந்து காந்தி நகரிலும் இந்த 5ஜி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தோ-பிரான்ஸ் கூட்டு ராணுவ பயிற்சி
- “Ex SHAKTI- 2021″ என்று அழைக்கப்படும் இந்தோ – பிரான்ஸ் கூட்டு இராணுவப் பயிற்சியின் 6வது பயிற்சி முகாம், பிரான்சில் நவம்பர் 26, 2021 அன்று நிறைவடைந்தது.
- இந்த முகாமில் களப்பயிற்சி, கடின பணிச்சூழல் பயிற்சி, எதிர்ப்பு நடவடிக்கைகள் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டது.
சர்வதேச விமான சேவை மீண்டும் தொடக்கம்
- கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் விமான சேவைகள் நிறுத்தப்பட்டது.
- ஏர்பபுள் திட்டத்தின் அடிப்படையில் அவசர கால விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன.
- இதனையடுத்து கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ள நாடுகளுக்கு மட்டும் வரும் டிசம்பர் 15 முதல் சர்வதேச விமான சேவைகள் தொடங்கப்பட உள்ளது.