தமிழகத்தில் இத்துறை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு – OPS வலியுறுத்தல்!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. ஆனால் இந்த நேரத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. அதனால் இதனை கண்டித்து ரேஷன் கடை ஊழியர்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் இதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அகவிலைப்படி உயர்வு
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு ஊழியர்கள் 31 சதவீத அகவிலைப்படியை பெற்றனர். ஆனால் இந்த அகவிலைப்படி உயர்வு ரேஷன் கடை ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. அதனால் இதனை கண்டித்து அரசு ஊழியர்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் ஜூன் 7 முதல் 9ம் தேதி வரை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வித்துறையின் புதிய உத்தரவு!
மேலும் இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ரேஷன் கடை ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வு உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அத்துடன் தற்போது ரேஷன் கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் அரிசி, கோதுமை உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் மலிவான விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
மேலும், ரேஷன் கடைகளில் அவ்வப்போது அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு ஆகியவை தவிர மஞ்சள், புளி, மிளகு, சீரகம், எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் தரமற்று இருப்பதால் அதனை ரேஷன் அட்டைதாரர்கள் வாங்க மறுக்கின்றனர். அதனால் இந்த பொருட்களை ஊழியர்களுக்கு கொடுப்பதாகவும் இதற்கு மாதம் 1500 அவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்வதாகவும் புகார் எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட 14% அகவிலைப்படி உயர்வை ரேஷன் கடை ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என்றும் ஓபிஸ் வலியுறுத்தியுள்ளார்.