அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு – ஹாப்பி நியூஸ்! விரைவில் அறிவிப்பு!
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு அடிப்படையில் விரைவில் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அகவிலைப்படி:
இந்தியாவில் மத்திய அரசு, கடந்த வருடம் அகவிலைப்படி உயர்வு அளித்தது. அதன்படி 2 கட்டங்களாக ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு தற்போது 31% வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான ஊழியர்களும் ஓய்வூதியர்களும் பயன் பெற்று வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்ததாக 2022ம் ஆண்டு முதல் அகவிலைப்படி மேலும் 3% உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி 34% ஆக அதிகரிக்கும். இதனால் அடிப்படை சம்பளம் ரூ.18,000 பெறும் நபர் ரூ.6,120 வரை கூடுதல் தொகை பெறுவார்.
IPPB வங்கியில் ஜீரோ பேலன்ஸ் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – ஏகப்பட்ட நன்மைகள்!
இந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்ட 18 மாத காலமாக நிலுவையில் உள்ள அகவிலைப்படி தொகையும் ஒரே செட்டில்மெண்டில் வழங்க இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளது. ஆனால் இதுவரை நிலுவையில் உள்ள அகவிலைப்படி தொகை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. மேலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹோலி பண்டிகைக்கு பிறகு அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று தகவல்கள் வந்தது. அதனை தொடர்ந்து நீண்ட நாள் கோரிக்கையான ஊதிய உயர்வு குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.
தமிழகத்தில் மீண்டும் பள்ளி & கல்லூரிகள் மூடல்? உண்மை நிலவரம் இதுதான்?
அதன்படி பிட்மெண்ட் தொகை 2.57 மடங்கில் இருந்து 3.68 மடங்காக உயர்த்த போவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் 7-வது ஊதியக்குழு அடிப்படையில் விரைவில் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் பெறுவார்கள் மத்திய அரசு தெரிவித்துள்ளது.