மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை எப்போது?

0
மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு - அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை எப்போது?
மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு - அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை எப்போது?
மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை எப்போது?

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் 18 மாத கால நிலுவைத்தொகை வழங்கப்படாமல் உள்ளது. இதனை அரசு ஒரே தவணையாக செலுத்த இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது பணவீக்கம் அதிகரித்து உள்ளதால் இது குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று கேள்வி எழுந்துள்ளது.

அகவிலைப்படி உயர்வு

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு தொழில்களில் பாதிப்பு ஏற்பட்டதால் அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. அதனால் அரசு நிதி நெருக்கடியை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. இதில் குறிப்பாக அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. அத்துடன் அரசு ஊழியர்களுக்கான 18 மாத கால நிலுவை தொகையும் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கி வருகின்றனர்.

SBI வங்கியில் கிசான் கிரெடிட் கார்டு வாங்குவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

அதன்படி தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 31% அகவிலைப்படி உயர்வை பெற்று வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். இதனை தொடர்ந்து இந்த ஆண்டு தொடங்கிய நிலையில் இன்னும் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால் அண்மையில் அகவிலைப்படி மற்றும் 18 மாத கால நிலுவைத்தொகையை மத்திய அரசு ஒரே தவணையாக மொத்தமாக வழங்க உள்ளதாக திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியானது.

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் குழந்தைகளை சேர்க்க விரும்புவோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்புகள் இதோ!

அதனால் அரசு ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால் தற்போது நாட்டில் பணவீக்கம் அதிகரித்து இருப்பதால் இதற்கான அறிவிப்பு வெளிவர வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக அதிகாரி ஒருவர், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகை தற்போது கிடைக்க வாய்ப்பில்லை என்று கருத்து தெரிவித்துள்ளார். அத்துடன் மத்திய அரசுக்கு பல்வேறு நிதி நெருக்கடிகள் உள்ள சூழலில் ஒரே தவணையில் அகவிலைப்படி மற்றும் நிலுவைத்தொகை வழங்கப்படுவது என்பது சாத்தியமாகாது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!