கேந்திரிய வித்யாலயா பள்ளியில் குழந்தைகளை சேர்க்க விரும்புவோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்புகள் இதோ!
நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளி நிர்வாகங்கள் சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.
மாணவர் சேர்க்கை:
தற்போது நாடு முழுவதும் 1,247 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மத்திய அரசின் கீழ் இயங்கி வருகின்றன. ராணுவத்தினர், மத்திய, மாநில அரசின் அலுவலர், ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனத்தினர் ஆகியோரின் குழந்தைகளுக்கு இப்பள்ளிகளில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் போக மீதமுள்ள இடங்கள் மற்றவர்களுக்கு வழங்கப்படும். மத்திய அரசு ஊழியர்கள் அவ்வப்போது இடம் மாற்றம் பெரும் போது அவர்களது குழந்தைகள் கற்றலில் எவ்வித சிக்கலும் இல்லாமல் அந்தந்த மாவட்ட அல்லது மாநில பள்ளிகளிலேயே கல்வியை தொடர முடியும்.
TNPSC தேர்விற்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – தமிழ்நாடு வரலாறு..!
ஆண்டுத்தோறும் இப்பள்ளிகளில் மாணவர்கள சேர்க்கை நடைபெற்று வருகிறது. இப்பள்ளியில் அட்மிசன் கிடைப்பது என்பதை சற்று சவாலாகவே இருந்து வருகிறது. மற்ற ஆண்டுகளை தொடர்ந்து தற்போது 2022 – 2023 ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை இன்று (பிப்.28) தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 1ம் வகுப்பில் சேரவிருக்கும் மாணவர்களுக்கு 2022 மார்ச், 31 அல்லது ஏப் 1ம் தேதியுடன் 5 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதாவது 1ம் வகுப்பில் மாணவர்களை சேர்க்கும் போது அந்த ஆண்டு மார்ச், 31 அல்லது ஏப் 1ல், 5 வயது நிறைந்திருக்க வேண்டும்.
SBI வங்கியில் கிசான் கிரெடிட் கார்டு வாங்குவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
தங்களது குழந்தைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் kvsonlineadmission.kvs.gov.in. என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் சுயதொழில் செய்வோர், தனியார் துறையில் பணியாற்றுவோரும் தங்களுக்குரிய பகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கலாம். முன்னுரிமை அடிப்படையில் தான் பள்ளியில் சேர்க்கை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது .