மத்திய அரசு ஊழியர்களுக்கு மார்ச் 31 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், மார்ச் 30 அன்றே 50% DA வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அகவிலைப்படியில் 4% அதிகரிப்பு:
7வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், DA 46% லிருந்து 50% ஆக உயர்த்தப்பட்டது. இந்த 4% DA அனுமதி ஜனவரி 2024 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத நிலுவைத் தொகையும் இம்மாதம் வழங்கப்படவுள்ளது. மேலும் இந்த DA உயர்வால் குழந்தை பராமரிப்பு கொடுப்பனவு, குழந்தை கல்வி கொடுப்பனவு, விடுதி மானியம், இடமாற்றத்திற்கான பயணப்படி, ஆடை கொடுப்பனவு, பணிக்கொடை உச்சவரம்பு மற்றும் மைலேஜ் கொடுப்பனவு ஆகியவையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ரூ.12,500 முதலீடு செய்தால் ரூ.66 லட்சமாக ரிட்டன் – PPF பயனாளிகளுக்கான முக்கிய அறிவிப்பு இதோ!
தற்போதைய நிதியாண்டின் கடைசி நாள் என்பது ஞாயிற்றுக்கிழமையாக இருப்பதால் மார்ச் 31 அன்று வேலை செய்யுமாறு அனைத்து வங்கிகளையும் ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வானது மார்ச் 31 ஞாயிற்றுக்கிழமையை என்பதால் மார்ச் 30 அன்றே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 48.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 67.95 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.