மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு – அகவிலைப்படியின் அம்சங்கள்!
மத்திய அரசு ஊழியர்களின் 28% அகவிலைப்படி (DA) உயர்வு மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான நிவாரணம் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஊழியர்களுக்கான சம்பள கணக்கீடுகள் குறித்த விளக்கங்கள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.
DA உயர்வு
மத்திய அமைச்சரவை நேற்று (ஜூலை 14) மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) 28% மும், ஓய்வூதியதாரர்களுக்கான நிவாரணத்தையும் வழங்குவதாக ஒப்புதல் அளித்தது. இதனால் 1.14 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பலனடைவார்கள் என தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். இந்த DA தொகையானது திரும்ப செலுத்தப்படுவதன் அடிப்படையில், அதன் கணக்கீடுகளை கவனித்தால் தற்போது, அரசு ஊழியர்களுக்கு 17% DA தொகை கிடைக்கிறது.
புதுவையில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்திவைப்பு – கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!
அதாவது ஒரு அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.18,000 மாக இருந்தால் அவர்களுக்கான அகவிலைப்படி (DA) ரூ.3,060 ஆக இருக்கும். அதன் கீழ் 28% மாக DA அளவு அதிகரிக்கையில் மொத்த தொகை ஒரு மாதத்திற்கு ரூ.5,040 ஆக இருக்கும். இந்த கணக்கீடுகள் ஜூலை 1 முதல் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த DA குறித்த மேலும் சில விரிவான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில்,கொரோனா தொற்றால் நிறுத்தப்பட 3 தவணைகளுக்கான DA மற்றும் DR டிவிகிதங்கள் 11% வரை அதிகரித்துள்ளன.
இந்த அகவிலைப்படி (DA) என்பது பணவீக்கத்திற்கு எதிரான ஒரு வருட சம்பளத்தின் ஒரு அங்கமாகும். இந்த DA தொகையானது ஜனவரி மற்றும் ஜூலை என்ற வகையில் ஆண்டுக்கு இரண்டு முறை திருத்தப்படுகிறது. மேலும் DA மற்றும் DR அதிகரிப்பு மூலம் மத்திய அரசு கருவூலத்தில் ஆண்டுக்கு, 34,401 கோடி வரை செலவு செய்யப்படுவதாக அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். இந்த நிதியாண்டில், DA உயர்வுக்கு பின்னர் ஜூலை முதல் பிப்ரவரி வரை மத்திய அரசின் கருவூலத்திற்கு, 22,934.56 கோடி செலவாகும்.
TN Job “FB Group” Join Now
அரசு ஊழியர்களின் இந்த மாத சம்பளத்தில் இருந்து அவர்களின் அடிப்படை ஊதியத்தில் 28% DA பெற வாய்ப்புள்ளது. மேலும் DA மற்றும் DR விகிதம், 2020 ஜனவரி 1 முதல் 2021 ஜூன் 30 வரை 17% ஆக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது DA தொகையானது கடந்த ஜூலை 2020 மற்றும் ஜனவரி 2021 இல் திருத்தப்படவில்லை. ஆனால் 28% DA உயர்வு இந்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்றும், ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையிலான நிலுவைத் தொகை இருக்காது என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட 4% DA உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
பல ஊடகங்களில் ஒன்றிய அரசு ஊழியர்கள் டி.ஏ உயர்வு பற்றி தவறான அதிகாரப்பூர்வமற்ற செய்திகளை வெளியிடுவது ஏன் என்றே தெரியவில்லை.அகவிலைப்படி உயர்வு கானல் நீராகவே உள்ளது.
Pls publish news after confirmation. Don’t spread rumors
Most of the channels actual intention is against the govt servants. Thats why they are publishing false propaganda. Its highly condemnablle