நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 2 , 2018
ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்ட உலக அமைதிக்கான “பிரஜபிதா பிரம்மகுமாரி ஈஸ்வரியா பல்கலைக் கழகம்” அமராவதியில் அமைய உள்ளது.
மனிதர்களுக்கும் சுற்றுப்புற சூழல்களுக்கும் தீங்கு விளைவிக்கும் என்டோசல்பான் மற்றும் 19 வகையான பூச்சி கொல்லிகளை பஞ்சாப் மாநில அரசு தடை செய்துள்ளது.
கரிம வேளாண்மையை ஊக்குவிப்பதற்காக ரூபாய் 1500 கோடியை உத்தரகாண்ட் மாநிலத்திற்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்தியாவின் முதல் அதிவேக மின்சார என்ஜின் 120 கி.மீ வேகத்தில் செல்ல கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இரயில் மார்ச் 2018 ல் இருந்து நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வேயினால் ரயில் பெட்டி தொழிற்சாலை மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடங்கப்பட உள்ளது.
சாகித்திய அகாடமியின் “பாஸ்சா சம்மன் விருது” (Bhasha Samman Award) பெற்ற ஆனாந்த் மதுகர் மகதி மொழிக்காக பெற்றார். மகதி மொழி பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் பேசப்படுகிறது.
உள்ளுர் சமூகங்கள் தொடர்பான செய்தினை பகிர “புல்லட்டின் (Bulletin)” செயலியை Google அறிமுகப்படுத்தியது.
இந்திய கடலோர காவல் படையின் 41 வது நிறுவன நாள் பிப்ரவரி 1 ல் அனுசரிக்கப்படுகிறது.
NASA செவ்வாய் கிரகத்தில் உள்ள ஏழு மலைகளுக்கு தனது குழுவில் உள்ளவர்களின் பெயர்கள் வைத்துள்ளது. அந்த பெயரில் கல்பனா சாவ்லாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
ஆக்சிஸ் பேங்க் சிறு மற்றும் குறு தொழில் தொடங்குவோருக்கான புதிய திட்டமான “Evolve” என்பதை 4 வதாக கோயம்புத்தூpல் தொடங்கினார். இது “Transform Your Family Business into Your Dream Company”