ஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 15,16 2018
- செப்டம்பர் 15 – ஜனநாயகத்தின் சர்வதேச நாள்
2018 தீம்: Democracy under Strain: Solutions for a Changing World
- செப்டம்பர் 16 – ஓசோன் அடுக்கு பாதுகாப்பிற்கான சர்வதேச தினம்
- 1948 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 அன்று இந்திய யூனியனுடன் ஹைதராபாத் மாநிலத்தை இணைத்ததின் 70வது ஆண்டுவிழா கொண்டாட்டம்.
- ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் அம்மாநிலத்தை திறந்தவெளி கழிப்பிடமற்ற (ODF) மாநிலமாக அறிவித்தார்.
- புதுடில்லியில் சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ் தூய்மையே சேவை திட்டத்தை (Swachhata Hi Seva movement)தொடங்கினார்.
- உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15-வது பிரவசி பாரதி திவாஸ்-2019 நடைபெறும்.
- டி.பிக்கு எதிராக போராடுவதற்கு உலகளாவிய திட்டதிற்கு ஐ.நா. ஒப்புதல்
- டெக்சாஸின் ஆசிய சொசைட்டி ஹவுஸ்டனில் ஜெய்ப்பூர் இலக்கிய விழா துவங்கியது.
- தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் எகிப்தில் பண்டைய ஸ்பின்க்ஸை கண்டுபிடித்துள்ளனர்.
- இங்கிலாந்தின் நோவாசர் மற்றும் எஸ்1-4 செயற்கைகோள்கள் பொருத்தப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
- விஞ்ஞானிகள் டெல்ஃப்லை நிம்பிள் என்ற தன்னியக்க பறக்கும் ரோபோவை உருவாக்கியிருக்கிறார்கள்.
- நாசாவால் பனி இழப்பை கண்காணிக்க லேசர் செயற்கைக்கோள் ஐஸ்சாட்[ICESAT]-2 விண்வெளியில் ஏவப்பட்டது.
- முத்தாஸ் மௌசா அப்தல்லா – சூடான் புதிய பிரதமர்
- அரசு 5 லட்சம் ஆரம்ப சுகாதார மையங்களை ஆரோக்கிய மையங்களாக மாற்றியமைக்க உள்ளது
- எல்லை பாதுகாப்புப்படை பாகிஸ்தான், வங்காளதேச எல்லைகளில் உயர் தொழில்நுட்ப கண்காணிப்பு அமைப்பை நிறுவ திட்டமிட்டுள்ளது.
- மேன் போர்ட்டபிள் ஆண்டி-டேங்க் வழிகாட்டப்பட்ட ஏவுகணை (MPATGM), வெற்றிகரமாக இரண்டாவது முறையாக சோதனை செய்யப்பட்டது.
- மலையேறும் வீரர்கள் சத்தியாருப் சித்தாந்தா & மௌசுமி கத்துவா ஆகியோர் ஈரானில் உள்ள தமாவண்ட், ஆசியாவின் மிகப்பெரிய எரிமலை சிகரத்தை ஏறி வரலாற்று சாதனை படைத்தனர்.
- விமானப்படை சங்கம் ஆண்டு தினத்தை கொண்டாடியது.
- சுற்றுலா அமைச்சகத்தின் ‘பர்யதன் பர்வ்’ ஸ்ரீ ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.
- இந்திய குத்துச்சண்டை வீரர்கள் சிம்ரன்ஜித் கவுர், மோனிகா மற்றும் பாக்யபதி கச்சாரி அஹ்மெத் கொமெர்ட் போட்டியில் தங்க பதக்கங்களை வென்றனர்.
- பெண்கள் சிலேசியன் ஓபன் குத்துச்சண்டை போட்டியில் எம்.சி மேரி கோம் 48 கிலோ பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றார். 51 கிலோ இளைஞர் பிரிவில் ஜோதி குலியா தங்கம் வென்றார்.
- தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி மாலத்தீவு சாம்பியன்.
- ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடந்த மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கென்யாவின் எலியாட் கிப்சோஜ் 2 மணி ஒரு நிமிடம் 39 வினாடிகளில் இலக்கை கடந்து புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார்.
- டாடா மும்பை மராத்தானுக்கு, சர்வதேச தடகள கூட்டமைப்பு (IAAF) கோல்டு லேபிள்க்கான அங்கீகாரம் அளித்தது.
ஆகஸ்ட் நடப்பு நிகழ்வுகள் வினா விடை
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு