ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 21 2018
நவம்பர் 21 – உலக தொலைக்காட்சி தினம்
நவம்பர் 21 – உலக மீன்பிடி தினம்
- கோவாவின் பனாஜி நகரில் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் (IFFI) மகாத்மா காந்தியின் பல-ஊடக டிஜிட்டல் கண்காட்சியை அமைச்சர் ராஜ்யவர்த்தன் ராத்தோர் மாநில அமைச்சர் தொடங்கிவைத்தார்.
- சட்டசபை மற்றும் பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை ஒதுக்கீடு செய்வதற்கான ஒரு தீர்மானத்தை ஒடிசா சட்டசபை ஏகமனதாக நிறைவேற்றியது.
- மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வீடியோ கான்பரன்சிங் மூலம் ‘நிறுவனங்களின் கண்டுபிடிப்பு கவுன்சில் (ஐ.ஐ.சி.) திட்டத்தை புது டெல்லியில் துவக்கி வைத்தார்.
- ஏற்கனவே அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளால் நிராகரிக்கப்பட்ட ஐ.நா. இடம்பெயர்வு ஒப்பந்தத்தை நிராகரிப்பதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.
- அமெரிக்கா பாகிஸ்தானுக்கு வழங்கும்66 பில்லியன் டாலர் பாதுகாப்பு உதவித்தொகையை இடைநீக்கம் செய்துள்ளது.
- சவூதி அரேபியா மற்றும் யு.ஏ.இ. 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை போரால் பாதிக்கப்பட்டுள்ள ஏமன் நாட்டிற்கு வழங்கியது.
- 3வது இந்தியா-சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் உரையாடல் விசாகப்பட்டினத்தில் முடிவடைந்தது.
- தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சமூக வானொலி விழிப்புணர்வு ஓர்க்ஷாப் கோவாவின் பனாஜியில் உள்ள சர்வதேச மையத்தில் திறக்கப்பட்டது.
- தென் கொரியாவின் கிம் ஜாங் யாங் – இன்டர்போல் தலைவர் [2020 வரை]
- ஆக்ராவில் ஒருங்கிணைந்த கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டத்திற்கு என்எம்சிஜி ஒப்புதல்.
- தாஜ்மஹாலை பாதுகாக்கவும், உத்தரப்பிரதேசம், பீஹார், மேற்குவங்கம் மற்றும் ஹிமாச்சலப்பிரதேசம் ஆகியவற்றில் காற்று மாசுபடுவதைக் குறைக்க கழிவு நீர் அகற்றும் திட்டங்களுக்கு என்எம்சிஜி ஒப்புதல்.
- ஆண்கள் மற்றும் பெண்கள் குழுப்பிரிவில் இந்தியா இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றன.