தேசிய செய்திகள்
ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள மஞ்சேஸ்வர் இரயில் பழுதுபார்க்கும் நிலையத்தில் இந்திய ரயில்வே தனது ஆற்றல் ஆலையை அமைத்துள்ளது
கிழக்கு கடற்கரை ரயில்வே மஞ்சேஸ்வர் இரயில் பழுதுபார்க்கும் நிலையத்தில் கழிவிலிருந்து ஆற்றல் தயாரிக்கும் ஆலையை வெற்றிகரமாக நியமித்துள்ளது. இந்த ஆலை, இந்த ஆலை இந்தியாவில் முதல் முறையாகவும் உலக அளவில் 4வது மாலையாகவும் உள்ளது.
ரயில்வே வாரிய உறுப்பினர் ராஜேஷ் அகர்வால், கிழக்கு கடற்கரை ரயில்வேயின் இந்த ஆலையை ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள மஞ்சேஸ்வர் இரயில் பழுதுபார்க்கும் நிலையத்தில் திறந்து வைத்தார்.
டாக்டர் ஜிதேந்திர சிங் இந்தியாவின் முதல் உலகளாவிய அறிவியல் கண்காட்சி விக்யான் சமக மத்தை டெல்லியில் திறந்து வைத்தார்
மத்திய மாநில அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தியாவின் முதல் உலகளாவிய அறிவியல் கண்காட்சி விக்யான் சமக மத்தை டெல்லியில் திறந்து வைத்தார். இவர் அறிவியல் ஆராய்ச்சிக்கு மூன்று அடுக்கு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்று கூறினார். இதனால் இளைய தலைமுறையினர், அறிவியல் ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட முடியும் என தெரிவித்தார்.
இக்கண்காட்சியில் நோக்கம் மாணவர்கள், கல்வித்துறை மற்றும் தொழில்கள் மத்தியில் அடிப்படை அறிவியல் அறிவை ஊக்கிவிப்பதாகும்.
தேசிய தரவு மற்றும் பகுப்பாய்வு தளத்தை நிதி ஆயோக் உருவாக்கியது
நிதி ஆயோக், இந்திய அரசாங்கத்தின் கொள்கை சிந்தனைக் குழுவான தேசிய தரவு மற்றும் பகுப்பாய்வு தளத்திற்கான (என்.டி.ஏ.பி) ஆவணத்தை வெளியிட்டுள்ளது, இதில் பல அரசு துறைகளின் சமீபத்திய தரவுத்தொகுப்புகள் உள்ளன. இது பயனர் நட்பு முறையில் பங்குதாரர்களுக்கு தரவை காட்சிப்படுத்துவதற்கான விவரங்களையும் வழங்குகிறது.
மாநில செய்திகள்
ராஜஸ்தான்
ஜெய்ப்பூர் இலக்கிய விழா ராஜஸ்தானில் தொடங்கியது
ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் இலக்கிய விழா தொடங்கியுள்ளது. இந்த விழாவை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லோட் திறந்து வைத்தார். தொடக்க அமர்வில் உரையாற்றிய முதலமைச்சர், இந்த இலக்கிய விழா மூலம் ராஜஸ்தானின் கலாச்சாரத்தை மக்கள் அறிவார்கள் என்றும் எந்தவித தயக்கமும் இல்லாமல் மக்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளக்கூடிய தளம் இது என்று அவர் கூறினார். விழாவில் எரிசக்தி அமைச்சர் பி.டி. கல்லாவும் கலந்து கொண்டார்.
உத்தர பிரதேசம்
இந்தியாவிற்கான விலங்குகளுக்கான முதலாவது போர் நினைவிடம் விரைவில் உத்தர பிரதேசம் மீரட்டில் திறக்கப்பட உள்ளது
நாய்கள், குதிரைகள் மற்றும் கழுதைகள் உள்ளிட்ட சேவை விலங்குகளுக்கான இந்தியாவின் முதல் போர் நினைவிடத்தை உத்தர பிரதேசம் மீரட் நகரத்தில் அமையப்பட உள்ளது. இந்த இடம் காஷ்மீரில் கிளர்ச்சி நடவடிக்கைகளில் மற்றும் கார்கில் போரின் போது போர்க்களத்தில் இராணுவத்திற்கு உதவிய வீரர்கள் மற்றும் விலங்குகளின் பங்களிப்பை நினைவுகூறும்..
புது தில்லி
டெல்லி விமான நிலையத்தில் பெண்கள் மட்டுமே இயக்கக்கூடிய புதிய வண்டி சேவை தொடங்கவுள்ளது
புதுடில்லியில் பெண்கள் பாதுகாப்பாக உணர புதிய முயற்சியாக, 2020 ஜனவரி 10 ஆம் தேதி நகரின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து பிரத்யேக டாக்ஸி சேவை தொடங்கவுள்ளது. டெல்லி யின் எந்த பகுதியில் இருந்தும் இந்த வண்டி சேவையை அணுகலாம்.
சர்வதேச செய்திகள்
கட்டரீனா சாகெல்லரோபலூ கிரேக்கத்தின் முதல் பெண் ஜனாதிபதியாக தேர்தெடுக்கபட்டார்
உயர்நீதிமன்ற நீதிபதியும் மனித உரிமை ஆர்வலருமான கட்டெரினா சாகெல்லரோபலூ புதன்கிழமை கிரேக்கத்தின் முதல் பெண் ஜனாதிபதியாக நாட்டின் பாராளுமன்றத்தால் பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தற்போதைய ஜனாதிபதி புரோகோபிஸ் பாவ்லோபலோஸுக்குப் பிறகு பதவியேற்பார், இவர் பதவிக்காலம் மார்ச் உடன் நிறைவடைகிறது.
உலகின் மிகச்சிறிய தங்க நாணயத்தை ஸ்விசர்லாந்து வெளியிட்டு உள்ளது
சுவிட்சர்லாந்து அரசுக்கு சொந்தமான சுவிஸ் நாணயம் அச்சிடும் நிறுவனம் உலகின் சிறிய தங்க நாணயத்தை அச்சிட்டு உள்ளது இந்த நாணயத்தில் விஞ்ஞானி ஆல்பர்ட்டின் முகம் இடம் பெற்று இருக்கும். இதன் அளவு 2.96 மில்லி மீட்டர் ஆகும்
இந்தியா எம்.ஆர் ரக தடுப்பூசியை மாலத்தீவுக்கு 72 மணி நேரத்திற்குள் வழங்கி உள்ளது
மாலத்தீவில் அம்மை நோய் பரவுவதை தடுக்க 30,000 டோஸ் தட்டம்மை மற்றும் ரூபெல்லா (எம்ஆர்) தடுப்பூசியை இந்தியா மாலத்தீவுக்கு வழங்கியது. கோரிக்கையின் 72 மணி நேரத்திற்குள் தடுப்பூசி வழங்கல் விரைவாக வாங்கப்பட்டு மாலத்தீவு சுகாதார அமைச்சகத்திற்கு வழங்கப்பட்டது. இந்திய அரசுக்கு நன்றி தெரிவிக்க சுகாதார அமைச்சர் அப்துல்லா அமீன் இந்திய தூதர் சுஞ்சய் சுதீருக்கு பாராட்டு சான்றிதழை வழங்கினார்.
வங்கி செய்திகள்
வோடபோன் எம்-பெசாவின் அங்கீகார சான்றிதழ் ரிசர்வ் வங்கியால் ரத்து செய்யப்பட்டது
வோடபோன் எம்-பெசாவின் அங்கீகார சான்றிதழை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. இது தொடர்பாக 30 செப்டம்பர் 2022 வரை வாடிக்கையாளர்கள் உரிமை கோரலாம். 2019 ஆம் ஆண்டில் ஆதித்யா பிர்லா மற்றும் ஐடியா பேமென்ட்ஸ் வங்கி லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்த பின்னர் வோடபோன் ஐடியா எம்-பெசாவை சேவைவின் நிறுத்தியது.
நியூ இந்தியா கூட்டுறவு வங்கி (என்ஐசிபி) சிறு நிதி வங்கியாக மாற்றப்பட உள்ளது
முதன்மை (நகர்ப்புற) கூட்டுறவு வங்கிகளின் தன்னார்வ மாற்றத்தின் கீழ் அதன் பங்குதாரர்கள் ஒப்புக் கொண்டதன் பின்னர் நியூ இந்தியா கூட்டுறவு வங்கி சிறு நிதி வங்கியாக (எஸ்.எஃப்.பி) மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வங்கி தற்போது மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் செயல்பட்டு வருகிறது.
சிட்டி யூனியன் வங்கி பன்மொழி குரல் அடிப்படையிலான ‘ஆல் இன் ஒன்’என்ற செயலியை அறிமுகப்படுத்துகிறது
சிட்டி யூனியன் வங்கி பன்மொழி குரல் அடிப்படையிலான ‘ஆல் இன் ஒன்’என்ற செயலியை அறிமுகப்படுத்திய நாட்டின் முதல் வங்கி ஆகும். இந்த செயலியில் வாடிக்கையாளர்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி அல்லது தெலுங்கில் உரையாடலாம். இருப்பு விசாரணை, மினி அறிக்கை, நிதி பரிமாற்றம் போன்ற பரிவர்த்தனைகள் உள்ளிட்ட பொதுவான வங்கித் தேவைகளுக்காக வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவை உதவியாக இருக்கும்.
தரவரிசை மற்றும் அறிக்கைகள்
ஐ.நா அறிக்கையில் உலகளாவிய வேலையின்மை 2020 ஆம் ஆண்டில் சுமார் 2.5 மில்லியனாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது
உலகளாவிய வேலையின்மை 2020 ஆம் ஆண்டில் சுமார் 2.5 மில்லியனாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, கிட்டத்தட்ட அரை பில்லியன் மக்கள் தாங்கள் விரும்புவதை விட குறைவான ஊதியத்தில் வேலை செய்கிறார்கள் அல்லது ஊதிய வேலைக்கு போதுமான அணுகல் இல்லை என்று ஐ.நா.வின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 9 ஆண்டுகளாக உலகளாவிய வேலையின்மை நிலையானது மாறாமல் இருந்துள்ளது, ஆனால் தற்போது உலகளாவிய பொருளாதார வளர்ச்சி குறைந்து வருவதாலும், தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், வேலையின்மையின் சதவீதம் அதிகரித்துள்ளது.
பொருளாதார புலனாய்வு பிரிவு 2019 ஆம் ஆண்டிற்கான ஜனநாயக குறியீட்டை வெளியிட்டது
பொருளாதார புலனாய்வு பிரிவு 2019 ஆம் ஆண்டிற்கான ஜனநாயக குறியீட்டின் 12 வது பதிப்பை வெளியிட்டுள்ளது. நார்வே முதலிடத்திலும், வட கொரியா பட்டியலில் கடைசி இடத்திலும் உள்ளது. குறியீட்டில் மொத்தம் உள்ள 167 நாடுகளில் இந்தியா 51 வது இடத்தில் உள்ளது.
விளையாட்டு செய்திகள்
கெலோ இந்தியா இளைஞர் விளையாட்டு சாம்பியன்ஸ் கோப்பையை மகாராஷ்டிரா வென்றுள்ளது
மகாராஷ்டிரா தனது இரண்டாவது கெலோ இந்தியா இளைஞர் விளையாட்டு (KIYG) கோப்பையை 78 தங்கம், 77 வெள்ளி மற்றும் 101 வெண்கல பதக்கங்களுடன் வென்றுள்ளது. அசாமின் நீச்சல் வீரர் சிவாங்கி சர்மா ஐந்து தங்கம் மற்றும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று போட்டியின் மிக வெற்றிகரமான பெண் வீரர் என தேர்வு செய்யப்பட்டார்.
200 பதக்கங்களுடன் (68 தங்கம், 60 வெள்ளி, 72 வெண்கலம்) ஹரியானா இரண்டாவது இடத்திலும், டெல்லி 122 பதக்கங்களுடன் (39 தங்கம், 36 வெள்ளி, 47 வெண்கலம்) மூன்றாவது இடத்திலும் உள்ளன.
உலக வில்வித்தை சங்கம், இந்திய வில்வித்தை சங்கத்தின் தடையை நீக்கியது
உலக வில்வித்தை சங்கம், இந்திய வில்வித்தை சங்கம் மீது விதிக்கப்பட்ட இடைநீக்கத்தை நீக்க முடிவு செய்தது . இந்திய வில்வித்தை சங்கம் ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் ஒரு முறை உலக வில்வித்தை கூட்டமைப்புக்கு அதன் உறுப்பினர்களைப் பற்றிய அறிக்கையை அனுப்ப வேண்டும்.
முக்கிய நாட்கள்
தேசிய பெண் குழந்தை தினம் ஜனவரி 24 அன்று கொண்டாடப்பட்டது
“பெட்டி பச்சாவ்-பேட்டி பதாவோ” திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு ஏற்படுத்த “பெண் குழந்தை திறன் பற்றி விழிப்புணர்வு கொண்ட மத்தியப் பிரதேசம்” என்ற தலைப்பில் ஜனவரி 24 ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தில் தேசிய பெண் குழந்தை தினம் கொண்டாடப்பட்டது.
To Subscribe Youtube Channel கிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channel கிளிக் செய்யவும்