நடப்பு நிகழ்வுகள் ஜூலை – 26, 2019
TNPSC Group 4 OnlineTestSeries 2019
முக்கியமான நாட்கள்
ஜூலை 26 – கார்கில் விஜய் திவாஸ்
- கார்கில் போரின் 20 வது ஆண்டுவிழா ஜூலை 26 அன்று கொண்டாடப்படுகிறது. 1999 ஆம் ஆண்டில் கார்கில் போரின் வெற்றியின் காரணமாக கார்கில் விஜய் திவாஸ் அனுசரிக்கப்படுகிறது. கார்கில் போர் 60 நாட்களுக்கு மேலாக போராடி முன்னர் பாகிஸ்தான் கைப்பற்றப்பட்ட அனைத்து பிரதேசங்களின் மீதும் இந்தியா மீண்டும் தனது கட்டுப்பாட்டை மீட்டதுடன் இப்போர் முடிவுபெற்றது. இந்த ஆண்டின் மையக் கருப்பொருள் “Remember, Rejoice and Renew”.
தேசிய செய்திகள்
புதிய புலி கணக்கெடுப்பு ஜூலை 29 அன்று வெளியிடப்படுகிறது
- பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புலிகள் கணக்கெடுப்பு வரும் ஜூலை 29, உலக புலி தினத்தில் வெளியிடப்படுகிறது பல நாடுகளின் 2010ன் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, 2022 க்குள் உலக புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது .
ஜம்மு & காஷ்மீர்
அங்கன்வாடி மையங்கள் மாடல் சமூக வசதிகளாக மாற்றப்படுகிறது
- ஜம்மு-காஷ்மீர் அரசு அங்கன்வாடி மையங்களை மாநிலத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கான அதிநவீன மாடல் சமூக வசதிகளாக மாற்றுவதற்கான ஒரு லட்சிய திட்டத்தை வகுத்துள்ளது. முதல் கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தற்போதுள்ள 50 அங்கன்வாடி மையங்கள் எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ உடன் இணைப்பதன் மூலம் மாடல் அங்கன்வாடி மையங்களாக மாற்றப்படும்.
அருணாச்சல் பிரதேசம்
சுத்தமான-பச்சை அருணாச்சல் பிரச்சாரம் 2019’ தொடக்கம்
- அருணாச்சல் பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு தலைநகர் இட்டாநகரில் மாநிலம் தழுவிய மரம் தோட்டத் திட்டமான ‘சுத்தமான-பச்சை அருணாச்சல் பிரச்சாரம் 2019’ தொடங்கினார். வன மஹோத்ஸவ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பிரச்சாரம் நடைபெற்று வருவதாகவும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் 1 கோடி மரம் நடும் இலக்கை நிர்ணயித்துள்ளதாகவும் முதலமைச்சர் பெமா காண்டு தெரிவித்தார்.
உத்தர பிரதேசம்
பிரதான் மந்திரி சூரக்ஷ பீமா யோஜனா திட்டத்தை அமல்படுத்துவதில் உ.பி. முதலிடத்தைப் பிடித்தது
- நம் நாட்டில் பிரதான் மந்திரி சூரக்ஷ பீமா யோஜனா திட்டத்தை அமல்படுத்துவதில் உத்தரபிரதேசம் முதலிடத்தைப் பிடித்தது. மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 31 மார்ச் 2019 வரை 1.95 கோடி மக்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சர்வதேச செய்திகள்
போரிஸ் ஜான்சனின் பிரிட்டிஷ் அமைச்சரவையில் 3 இந்திய வம்சாவளி நபர்கள்
- புதிய பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் மூலம் விரைவில் இங்கிலாந்து அரசாங்கத்தில் சேர்க்கப்படவுள்ள அமைச்சர்களில் மூன்று இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், பிரிதி படேல் மற்றும் அலோக் சர்மா ஆகியோர் அடங்குவர். உள்துறை செயலாளராக பிரிதி படேல், கருவூல தலைமை செயலாளராக ரிஷி சுனக் மற்றும் சர்வதேச வளர்ச்சி செயலாளராக அலோக் சர்மா ஆகியோர் நியமிக்கப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிவியல்
நாட்டின் முதல் விண்வெளி வீரரை 2022ல் விண்ணுக்கு அனுப்ப பாகிஸ்தான் திட்டம்
- நெருங்கிய நட்பு நாடான சீனாவின் உதவியுடன் 2022 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் தனது நாட்டின் முதல் விண்வெளி வீரரை விண்வெளிக்கு அனுப்பப்போவதாக அறிவித்தது. பாகிஸ்தானின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஃபவாத் சவுத்ரி, பிப்ரவரி 2020 முதல் விண்வெளி பயணத்திற்கான விண்வெளி வீரரை தேர்ந்தெடுக்கும் செயல்முறை தொடங்கும் என்று தெரிவித்தார்.
செயலி & இனைய போர்டல்
பாதுகாப்பு உற்பத்தியின் முக்கிய முயற்சிகள் குறித்து திறம்பட கண்காணிப்பதற்கான டாஷ்போர்டு
- பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங், பாதுகாப்புத்துறையின் பல்வேறு முயற்சிகள் மற்றும் திட்டங்களை திறம்பட கண்காணிக்க உதவுவதற்காக பாதுகாப்பு அமைச்சகத்துறையின் உற்பத்தி(டிடிபி) டாஷ்போர்டை தொடங்கினார். பொது மக்கள் www.ddpdashboard.gov.in என்ற முகவரியில் பாதுகாப்புத்துறை டாஷ்போர்டை பார்த்துக்கொள்ளலாம்.
மாநாடுகள்
துபாய் உலக கண்காட்சி 2020
- துபாய் உலக கண்காட்சி 2020 அக்டோபர் 20 முதல் 2021 ஏப்ரல் 10 வரை ஆறு மாதங்களுக்கு நடைபெறும். இந்தக் கண்காட்சியின் கருப்பொருள் “மனதை இணைத்தல், எதிர்காலத்தை உருவாக்குதல்” என்பது ஆகும்.
“தேசத்தைக் கட்டியெழுப்புதல்” குறித்த FICCI சர்வதேச கருத்தரங்கு
- கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங், புது தில்லியில் நடந்த ‘தேசத்தைக் கட்டியெழுப்புதல்’ என்ற FICCI சர்வதேச கருத்தரங்கின் போது தொழில்துறையின் பிரதிநிதிகள் மற்றும் இந்திய கடற்படையின் சீனியர் எக்கலன்ஸ் ஆகியோருடன் உரையாற்றினார்.
இந்தியா, சவுதி அரேபியா இருதரப்பு ஹைட்ரோகார்பன் ஒத்துழைப்பு குறித்து விவாதித்தன
- இருதரப்பு ஹைட்ரோகார்பன் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்காக, பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான் சவூதி அரேபியாவின் எரிசக்தி, கைத்தொழில் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் காலித் அல்-ஃபாலிஹுடன் கலந்துரையாடினார்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் & அமைச்சரவை ஒப்புதல்
இந்தியாவிற்கும் மாலத்தீவுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
- இந்தியாவும் மாலத்தீவும் கடந்த மாதம் மாலேயில் பயணிகள் மற்றும் சரக்கு சேவைகள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கம் பயணிகள் மற்றும் பொருட்களுக்கான போக்குவரத்துக்கு மாற்றான , நேரடி மற்றும் குறைந்த விலை வழிவகைகளை வழங்குவதன் மூலம் இரு நாடுகளுக்கிடையேயான மக்களை தொடர்பு கொள்வதை மேம்படுத்துவதாகும்.
மக்களவையில் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டது
- மக்களவையில் முஸ்லீம் பெண்கள் (திருமண உரிமை மீதான பாதுகாப்பு), மசோதா, 2019 ஐ பொதுவாக முத்தலாக் என்று அறியப்படும் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. 2017 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த போதிலும் இந்த நடைமுறை தொடர்ந்ததால் உடனடியாக முத்தலாக் தடைசெய்யும் சட்டத்தை கொண்டுவருவது முக்கியம் என்று சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
நியமனங்கள்
பி எஸ் எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவியேற்க உள்ளார்
- பி எஸ் எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவியேற்பார். அரசு அமைப்பதற்காக எடியூரப்பா ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்தார். கர்நாடக சட்டசபையில் பாஜகவின் 105 க்கு எதிராக 99 வாக்குகளை மட்டுமே பெற்ற பின்னர் எச் டி குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-ஜேடி (எஸ்) அரசாங்கம் வீழ்ந்தது.
தரவரிசை & குறியீடுகள்
ஃபிஃபா தரவரிசை
- வெளியிடப்பட்ட ஃபிஃபா தரவரிசையில் இந்திய கால்பந்து அணி இரண்டு இடங்கள் சரிந்து 103 வது இடத்திற்கு பின்சென்றுள்ளது.
விளையாட்டு செய்திகள்
கோவாவில் தேசிய டென்னிஸ் பயிற்சியாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது
- செப்டம்பர் 20 முதல் 23 வரை கோவாவில் 10 வது தேசிய டென்னிஸ் பயிற்சியாளர்கள் கூட்டம் நடைபெறும். இந்த கூட்டம் பயிற்சியாளர்கள் (பிற விளையாட்டுகளும்), டென்னிஸ் வசதி மேலாளர்கள் ஆர்வலர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு சமீபத்திய விளையாட்டு அறிவியல் தகவல்கள் மற்றும் டென்னிஸ் கோர்ட்டின் நடைமுறையான விஷயங்கள் குறித்தும் விளக்கக்கூடியதாக இருக்கும்.
PDF Download
2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
To Follow Channel –கிளிக் செய்யவும்
Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Group -ல் சேர – கிளிக் செய்யவும்