நடப்பு நிகழ்வுகள்  – அக்டோபர் 10 2018

0

நடப்பு நிகழ்வுகள்  – அக்டோபர் 10 2018

முக்கியமான நாட்கள்

அக்டோபர் 10 – உலக மன நல தினம்

  • உலக மனநல தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10 ம் தேதி உலகம் முழுவதும் மனநல சுகாதார பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் மன ஆரோக்கியத்திற்கு ஆதரவு திரட்டும் முயற்சிகளின் ஒட்டுமொத்த நோக்கத்துடன் அனுசரிக்கப்படுகிறது.

தேசிய செய்திகள்

அரியானா

தீன் பந்து சர் சோட்டு ராம் சிலையை பிரதமர் திறந்து வைத்தார்

  • பிரதமர் நரேந்திர மோடி ரோஹ்தக் நகர் சாம்பலாவில் தீன் பந்து சர் சோட்டு ராம் சிலையை திறந்து வைத்தார்

உத்தரகண்ட்

மாநிலத்தின் முதல் மின்சார பேருந்தின் சோதனை ஓட்டம்

  • உத்தரகண்ட் மாநில முதல்வர் த்ரிவேந்திர சிங் ராவத் மாநிலத்தின் முதல் மாசற்ற மின்சார பேருந்தின் சோதனை ஓட்டத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

தெலுங்கானா

கிராண்ட்மாஸ்டர் ஆனார் ஹர்ஷா

  • ஹர்ஷா பரத்கோடி தெலுங்கானாவின் இரண்டாவது கிராண்ட்மாஸ்டர் ஆனார்

சர்வதேச செய்திகள்

இலங்கையில் நஷ்ட ஈடு வழங்குவதற்கான அலுவலகத்தை அமைப்பதற்கான மசோதா

  • இலங்கையில், நஷ்ட ஈடு வழங்குவதற்கான அலுவலகத்தை அமைப்பதற்கான மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு பாராளுமன்றத்தில் குறித்து விவாதம் நடந்தது. மனித உரிமை மீறல் அல்லது மனிதாபிமான சட்டங்களை மீறிய பாதிக்கப்பட்ட நபர்களுக்கான தனிப்பட்ட மற்றும் கூட்டு நஷ்ட ஈடு தொகையை வழங்குவதற்காக இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரவீந்திரநாத் தாகூர் நினைவு அரங்கம்

  • இலங்கை ரூபாய் மதிப்பில் 30 கோடி செலவில் இந்திய நிதி உதவியுடன் கட்டப்பட்ட ரவீந்திரநாத் தாகூர் நினைவு அரங்கம் இலங்கையில் மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

அறிவியல் செய்திகள்

சூறாவளிப் புயல் திட்லி

  • மேற்கு மத்திய வங்கக்கடலில் சூறாவளிப் புயல் ‘டிட்லி’ கடுமையான சூறாவளி புயலாக வலுவடைந்தது.

வணிகம் & பொருளாதாரம்

எஸ்.பி.ஐ. NBFCகளில் இருந்து வாங்கும் கடன்களுக்கான இலக்கை மூன்று மடங்காக அதிகரிக்க முடிவு

  • வங்கி சாரா நிதி நிறுவனங்களிடம் (என்.பீ.எஃப்.சி.) இருந்து வாங்கிய கடன்களுக்கான இலக்கை மூன்று மடங்காக அதிகரிக்க ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ) முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம் அதிக தேவைப்படும் பணப்புழக்கத்தை இது சாத்தியமாக்கும்.

பயன்கள் தொடர்பான தரவுகளை சேமிக்க வாட்ஸ் ஆப் ஒரு அமைப்பை உருவாக்கியது

  • செய்தி அனுப்பும் தளமான, வாட்ஸ் ஆப் இந்தியாவில் ஒரு அமைப்பை அமைத்துள்ளது, இது ஆர்பிஐ ஒழுங்குமுறைகளுக்கு இணங்க நாட்டில் உள்நாட்டில் உள்ள பணம் செலுத்தும் தொடர்பான தகவல்களை சேமித்து வைக்கிறது.

மாநாடுகள்

பட்டு கண்காட்சி & ஓர்க்ஷாப்

  • இம்பாலில் உள்ள சில்க் சாமக்ராவில் மூன்று நாள் பட்டு கண்காட்சி மற்றும் ஓர்க்ஷாப்பை அமைச்சர் ஸ்ருதி இரானி திறந்து வைத்தார்.
  • பிரதமர் நரேந்திர மோடியின் மேற்பார்வையின் கீழ் வடகிழக்கு பிராந்திய ஜவுளி மேம்பாட்டுத் திட்டம் (NERTPS), வடகிழக்கு பிராந்தியத்தில் ஏராளமான ஜவுளித் துறை பூங்காக்கள் மற்றும் ஜவுளித் துறைகள் தற்போது செயல்பட்டு வருகின்றன.

SCO இன் 17 வது CHG கூட்டம்

  • துஷன்பே, தஜிகிஸ்தான் நகரில் நடைபெறவிருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 17 வது அரசாங்கத் தலைவர் கவுன்சில், CHG, கூட்டத்தில் பங்கு பெறுகிறார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்.

நியமனங்கள்

  • துஷார் மேத்தாஇந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரல்
  • சுனில் பாஸ்கரன்புதிய ஏர் ஆசியா இந்திய தலைவர்

திட்டங்கள்

சவுபாக்யா திட்டம்

  • பிரதான் மந்திரி சஹஜ் பிஜிலி ஹர் கர் யோஜனா – “சவுபாக்யா” திட்டம் ஒடிசாவில் உள்ள ஏழை மக்களின் வாழ்க்கையில் ஒரு மாபெரும் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது.
  • கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள அனைத்து மின்சாரம் இல்லாத குடும்பங்களுக்கும் கடைசி மைல் இணைப்பு மற்றும் மின் இணைப்பு ஆகியவற்றால் அனைவருக்கும் மின்சாரம் வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

அனைத்து பெண் நிர்வகிக்கப்படும் வாக்குப்பதிவு நிலையங்கள் அமைக்க தேர்தல் ஆணையம் திட்டம்

  • சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் நடைபெற உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதி வாக்குச் சாவடிகளிலும் பெண் நிர்வகிக்கப்படும் வாக்குப்பதிவு நிலையங்கள் அமைக்க தேர்தல் ஆணையம் திட்டம்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அரசிதழ் பதிவுபெறாத ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க அமைச்சரவை ஒப்புதல்

  • ரயில்வே அமைச்சகம், 12 லட்சம் அரசிதழ் பதிவுபெறாத ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க ஒப்புதல் அளித்தது.

தொழில் கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (NCVET) அமைக்க மத்திய அமைச்சரவை முடிவு

  • தேசிய கல்வி கழகத்தின் தேசிய கவுன்சிலிங் மற்றும் தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனம் (NSDA) ஆகியவற்றை NCVET ஐ இணைப்பதன் மூலம், தொழில் கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (NCVET) அமைக்க மத்திய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அடுத்த ஆண்டு குருநாகக் தேவின் 550 வது பிறந்த நாளை உலகம் முழுவதும் கொண்டாட திட்டம்

  • அடுத்த ஆண்டு குருநாகக் தேவின் 550 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தை உலகம் முழுவதும் கொண்டாட திட்டம். புதுடில்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான தேசிய செயல்பாட்டுக் குழுவின் உயர் மட்ட கூட்டத்தில் இந்த முடிவை எடுக்கப்பட்டது.

பாதுகாப்பு செய்திகள்

உயர் தர இராணுவ ட்ரோன்கலை பாகிஸ்தானுக்கு விற்க சீனா திட்டம்

  • 48 உயர்தர இராணுவ ட்ரோன்களை அதன் நட்பு நாடான பாகிஸ்தானுக்கு சீனா விற்க திட்டம்.

விளையாட்டு செய்திகள்

ஆசிய பாராவிளையாட்டு

  • ஹர்விந்தர் சிங் ஆண்கள் தனி ரீகர்வ் பிரிவில் [வில்வித்தை] தங்கம் வென்றார். ஆடவர் வட்டு எறிதல் போட்டி F11 பிரிவில் மோனு கங்காஸ் வெள்ளி வென்றார், முகம்மது யாசீர் ஆண்கள் குண்டு எறிதல் F46 பிரிவில் வெண்கலத்தை வென்றார்.
  • நாராயண் தாகூர் ஆண்கள் 100 மீட்டர் ஓட்டத்தில், தூப்பாக்கிசுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மனிஷ் நர்வால் தங்கம் வென்றனர்.
  • ஆண்கள் வட்டு எறிதலில் சுரேந்தர் அனீஷ் குமார், ராம் பால் ஆண்கள் உயரம் தாண்டுதலில் மற்றும் குண்டு எறிதலில் விரேந்தர் ஆகியோர் வெள்ளி பதக்கம் வென்றனர்.

சுல்தான் ஜோகர் கோப்பை

  • மலேசியாவில் சுல்தான் ஜோகர் கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதிப் போட்டிக்கு இந்திய ஆண்கள் ஜூனியர் அணி தகுதி பெற்றது.

PDF Download

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group – கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!