தமிழகம்
தமிழக அரசு அரசாணை வெளியீடு
- இலவச கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட ஏழை மாணவர்களின் கல்விக் கட்டணத்துக்காக தனியார் பள்ளிகளுக்கு ரூ.180 கோடி வழங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
வாகன சுற்றுப்பயணம்
- காஞ்சி, திருவள்ளூர் மாவட்டத்தில் நவீன கருவிகள் அடங்கிய காச நோய் கண்டறியும் வாகன சுற்றுப் பயணம் தொடங்கிவைக்கப்பட்டது.
- இந்த வாகனத்தில் உள்ள நவீன இயந்திரம் மூலம் பொதுமக்களிடையே காசநோய் பரிசோதனை மேற்கொண்டு 2 மணி நேரத்தில் முடிவைத் தெரிவித்து உரிய மருத்துவச் சிகிச்சைக்கு உதவ முடியும்.
புதுச்சேரியில் மின் கட்டணம் கடும் அதிகரிப்பு
- புதுச்சேரியில் மின் கட்டணம் கடுமையாக அதிகரித்துள்ளது.
- இது ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
- தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இயங்க உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நகலை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்தியா
சிபிஎஸ்இ அறிவிப்பு
- 10-ம் வகுப்பு கணிதத் தேர்வு மீண்டும் நடத்தப்படாது என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
- மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ கூறியுள்ளது.
விஜயலட்சுமிக்கு பத்ம விருது
- தமிழக நாட்டுப்புறப் பாடகி விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன்-க்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்மபூஷண் விருது வழங்கி கவுரவித்தார்.
உலகம்
பொலிவியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்
- தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியது.
சிங்கப்பூரில் தமிழ் மொழி திருவிழா தொடக்கம்
- சிங்கப்பூரில் தமிழ் மொழி திருவிழா கடந்த மார்ச் 31-ம் தேதி தொடங்கியது.
- இவ்விழா ஏப்ரல் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது.
- இதில் 58 நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன.
வணிகம்
நாஸ்காம் தலைவர் தேப்ஜானி கோஷ்
- இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை கூட்டமைப்பான நாஸ் காம் தலைவராக தேப்ஜானி கோஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- இவர் இன்டெல் நிறுவனத்தின் தெற்காசிய பிரிவின் நிர்வாக இயக்குநர் பதவியை வகித்தவராவார்.
ஊழியர்களை கோடீஸ்வரர் ஆக்கிய பந்தன் வங்கி
- ரூ.4,473 கோடியை திரட்டுவதற்காக சமீபத்தில் பந்தன் வங்கி பொதுப் பங்கு (ஐபிஓ) வெளியிட்டது.
- ஒரு பங்கின் விலை ரூ.499 அளவுக்கு உயர்ந்ததால் பந்தன் வங்கியின் தொடக்ககால ஊழியர்கள் பலர் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளார்கள்.
விளையாட்டு
ரபேல் நடால் மீண்டும் முதலிடம்
- டென்னிஸ் தரவரிசை பட்டியலில் நடால் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.
மும்பை புறப்பட்ட சிஎஸ்கே வீரர்கள்
- ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 3-ம் தேதி தொடங்கப்படவுள்ளன.
- முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர் கொள்கின்றனர்.