தேசிய செய்திகள்
ஏப்ரல் 2020 முதல் வாரத்திற்குள் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தை மத்திய அரசு அமைக்க உள்ளது
2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் வாரத்திற்குள் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்அமைக்கப்படும் என்று உணவு அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் அறிவித்து உள்ளார் .
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019 இன் கீழ் அமைக்கப்படவுள்ள இந்த ஆணையம், நுகர்வோர் உரிமைகள், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள், தவறான விளம்பரங்களை தொடர்பான பிரச்சினைகள் மற்றும் கலப்படம் செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதற்கு அபராதம் விதிக்கும்.
இந்தியாவும் நார்வேயும் இரு நாடுகளுக்கிடையே நிலையான வளர்ச்சிக்கான ஒத்துழைப்புக்கான கடிதத்தில் கையெழுதிட்டன
சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் மற்றும் நார்வேயின் சுற்றுச்சூழல் அமைச்சர் எச்.இ.ஸ்வைனுங் ரோட்வாட்ன் கூட்டாக நிலையான வளர்ச்சிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளன
இதன் மூலம் இரு நாடுகளும் ஒருங்கிணைந்த பெருங்கடல் மேலாண்மை மற்றும் ஆராய்ச்சிக்கு ஆதரவளிக்கவும் ஒன்றிணைந்து செயல்படவும் ஒப்புக்கொண்டன.
டெல்லி விமான நிலையம் முதல் ஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக் இல்லாத விமான நிலையம் என்ற பெயரை பெற்றுள்ளது
டெல்லி சர்வதேச விமான நிலையம் இந்தியாவில் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் இல்லாத முதல் விமான நிலையமாக மாறியுள்ளது. 2018 ஆம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தன்று இந்த விமானநிலையம் இந்த குறிக்கோளை ஏற்றுக்கொண்டது.
2022 ஆம் ஆண்டளவில் இந்தியா முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிப்பதற்கான இலக்கை நிலைநிறுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இது ஸ்வச் பாரத் மிஷன் என்ற தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.
சர்வதேச செய்திகள்
புதிய புள்ளிகள் அடிப்படையிலான விசா முறையை இங்கிலாந்து அறிவித்து உள்ளது
பிரிட்டனின் புதிய புள்ளிகள் அடிப்படையிலான விசா முறையை அறிமுகப்படுத்துவதாக இங்கிலாந்து உள்துறை செயலாளர் பிரிதி படேல் அறிவித்துள்ளார்.
இந்த புதிய முறையானது நாட்டிற்கு வரும் குறைந்த திறமையான புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் என்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமைச்சரவை அமைச்சர் பிரீதி படேல் தெரிவித்தார்.
இந்த புதிய முறை 2021 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும்.
நேபாளத்துடன் வர்த்தக ஒப்பந்தத்தில் பங்களாதேஷ் கையெழுத்திட்டு உள்ளது
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை மேம்படுத்த பங்களாதேஷ் நேபாளத்துடன் வர்த்தக ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டு உள்ளன . நேபாளத்திற்கு நேபாளத்திற்கு அருகில் உள்ள நில்பமாரி என்ற வடக்கே அமைந்துள்ள சைத்பூர் விமான நிலையத்தைப் பயன்படுத்தவும் பங்களாதேஷ் நேபாலை அனுமதித்துள்ளது.
நேபாளம் பிப்ரவரி 19 அன்று 70 வது தேசிய ஜனநாயக தினத்தை கொண்டாடியது
நேபாளம் தனது 70 வது தேசிய ஜனநாயக தினத்தை 2020 பிப்ரவரி 19 அன்று கொண்டாடியது. இந்நிகழ்ச்சியைக் குறிக்கும் வகையில் காத்மாண்டுவில் உள்ள நேபாள ராணுவ திடலில் சிறப்பு விழா நடைபெற்றது
ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி, துணைத் தலைவர் நந்தா பகதூர் புன், பிரதமர் கே.பி. சர்மா ஓலி, பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
மாநில செய்திகள்
அருணாச்சல பிரதேசம்
அருணாச்சல பிரதேசம் பிப்ரவரி 20, 2020 அன்று 34 வது மாநிலத்துவ தினத்தை கொண்டாடியது
அருணாச்சல பிரதேசம் தனது 34 வது மாநில தினத்தை பிப்ரவரி 20 அன்று கொண்டாடியது. பிப்ரவரி 20, 1987 அன்று அருணாச்சல பிரதேசம் மாநில அந்தஸ்தை அடைந்தது. உள்துறை அமைச்சர் அமித் ஷா இட்டாநகரில் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார்.
2020 ஆம் ஆண்டுக்கான அருணாச்சல பிரதேச தொழில்துறை மற்றும் முதலீட்டுக் கொள்கையையும் அமித் ஷா தொடங்கி வைத்தார்
மகாராஷ்டிரா
சிவாஜி ஜெயந்தி மகாராஷ்டிராவில் கொண்டாடப்பட்டது
மராட்டிய மன்னர் “சத்ரபதி சிவாஜி மகாராஜ்” அவர்களின் பிறந்த நாள் மகாராஷ்டிரா முழுவதும் கொண்டாடப்பட்டது .
துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு சத்ரபதி சிவாஜி மகாராஜின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
குஜராத்
சிறு நடுத்தர நிறுவன கடன்களை எளிதாக்க குஜராத் அரசு, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உடன் இணைந்துள்ளது
குஜராத் அரசு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன், சிறு நடுத்தர நிறுவனத் துறையில் உள்ள தொழில்முனைவோருக்கு கடன்களை எளிதில் மற்றும் குறுகிய காலத்திற்குள் ஒப்புதல் அளிக்க ரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது.
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி முன்னிலையில் முதன்மை செயலாளர் எம் கே தாஸ் மற்றும் எஸ்பிஐ அகமதாபாத் வட்ட பொது மேலாளர் ரமேஷ் குமார் அகர்வால் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
“சிந்தன் சிவீர்” அமர்வு குஜராத்தில் நடைபெற்றது
குஜராத்தின் கெவாடியாவில் “சிந்தன் சிவிர்” என்ற அமர்வு நடைபெற்றது. இந்த அமர்வு நிலக்கரி துறையின் எதிர்கால வாய்ப்புகளை வளப்படுத்துவதை மையமாகக் கொண்டது.
இந்த அமர்வுக்கு மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் ஸ்ரீ பிரல்ஹாத் ஜோஷி தலைமை தாங்கினார்
நியமனங்கள்
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியாக அஷ்ரப் கானி இரண்டாவது முறையாக பதவி ஏற்றார்
ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதித் தேர்தலில் அஷ்ரப் கானி வெற்றி பெற்றார். அவர் இப்பதவிக்கு இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
28 செப்டம்பர் 2019 அன்று இதற்கான தேர்தல் நடத்தப்பட்டது. கானி 50.64% வாக்குகளைப் பெற்றார். இவர் 39.52% வாக்குகள் வித்தியாசத்தில் தலைமை நிர்வாகி அப்துல்லாவை தோற்கடித்தார்.
முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சஞ்சய் கோத்தாரி லஞ்ச ஒழிப்பு அதிகாரியாகவும் மற்றும் பிமல் ஜூல்கா தலைமை தகவல் ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்
நரேந்திர மோடி தலைமையிலான உயர்மட்ட தேர்வுக் குழு புதிய தலைமை லஞ்ச ஒழிப்பு அதிகாரியாக, ஜனாதிபதியின் தற்போதைய செயலாளர் சஞ்சய் கோத்தாரி யையும் மற்றும் முன்னாள் தகவல் மற்றும் ஒளிபரப்பு செயலாளர் பிமல் ஜூல்காவை தகவல் ஆணையராகவும் தேர்வு செய்துள்ளது.
தரவரிசை மற்றும் குறியீடுகள்
2019 க்கான உலகளாவிய எதிர்காலக் குறியீட்டில் இந்தியா 35 வது இடத்தில் உள்ளது, பின்லாந்து முதலிடத்தில் உள்ளது
எதிர்காலக் குறியீட்டில் 2019 ஆம் ஆண்டில் இந்தியா 53 மதிப்பெண்களுடன்35 வது இடத்திலும், இந்த குறியீட்டில் பின்லாந்து முதலிடத்திலும், சுவீடன் இரண்டாவது இடத்திலும், நியூசிலாந்து மூன்றாம் இடத்திலும் உள்ளன.
2018 ஆம் ஆண்டில் இந்தியா 40 வது இடத்திலும் இருந்தது.
விளையாட்டு செய்திகள்
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் சுனில் குமார் தங்கம் வென்றார்
புதுடில்லியில் நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2020 போட்டியில் சுஷில் குமார் தங்கப்பதக்கம் வென்றார்.
சுஷில் குமார் 87 கிலோ பிரிவின் இறுதிப் போட்டியில் கிர்கிஸ்தானைச் சேர்ந்த அசாத் சாலிடினோவை வீழ்த்தினார். கடந்த ஆண்டு, சுஷில் குமார் இறுதிப் போட்டியில் போட்டியிட்டு வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஆண்களுக்கான ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை 2021 ஆம் ஆண்டு பதிப்பை இந்தியா நடத்த உள்ளது
ஆண்கள்ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை 2021 ஆம் ஆண்டிற்கான பதிப்பை இந்தியா நடத்தும் என்று சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சமீபத்தில் அறிவித்தது. பெண்களின் ஜூனியர் உலகக் கோப்பை நிகழ்வு தென்னாப்பிரிக்காவின் போட்செஃப்ஸ்ட்ரூமில் நடைபெறும்.
ஆப்பிரிக்கா கண்டம் இந்த விளையாட்டு நிகழ்வை ஏற்பாடு செய்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது
பிற செய்திகள்
சிறந்த பெண் கோல்ப் வீரர் மிக்கி ரைட் காலமானார்
மிகச்சிறந்த பெண் கோல்ப் வீரர் மிக்கி ரைட் அமெரிக்காவின் புளோரிடாவில் காலமானார். 1954 முதல் 1969 வரை ரைட் பெண்கள் தொழில்முறை கோல்ஃப் அசோசியேஷன் டூர் பட்டங்களின் 82 பட்டங்களை இவர் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
To Subscribe Youtube Channel கிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channel கிளிக் செய்யவும்