நடப்பு நிகழ்வுகள் – 18 அக்டோபர் 2022
சர்வதேச செய்திகள்
அணு ஆயுதத் தாக்குதல்களைத் தடுக்க நேட்டோவின் இராணுவப் பயிற்சி
- நேட்டோ அமைப்பின் அணு ஆயுத தாக்குதல் தடுப்பு ராணுவ பயிற்சி மேற்கு ஐரோப்பாவில் தொடங்கியது.
- வான்வெளி மீது நடைபெறும் இப்பயிற்சியில் மொத்தம் 60 விமானங்கள் வரை பங்கேற்கும்.மேற்கு ஐரோப்பா, பெல்ஜியம், இங்கிலாந்து உட்பட 30 நாடுகள் இணைந்துள்ள இந்த ராணுவ ஒத்திகை பயிற்சி, அக்டோபர் 30ம் தேதி வரை நடைபெறுகிறது.
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக தரவரிசை 2022:
- ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக தரவரிசை 2019 இல் தொடங்கியது, அதன் கீழ் நிபுணர்கள் விஞ்ஞானிகளை 22 அறிவியல் துறைகள் மற்றும் 176 துணைத் துறைகளாக வகைப்படுத்துகின்றனர்.
மேலும் இந்த பட்டியல் இரண்டுபிரிவுகளாக வெளியிடப்பட்டுள்ளது
1.தொழில் வாரியான தரவரிசை (கடந்த 25 ஆண்டுகளின் அடிப்படையில் தரவு) மற்றும் 2.கடந்த ஒரு வருடத்திற்கான தரவரிசை.
- உலகளவில், 200,409 விஞ்ஞானிகள் பிரிவின் கீழ் வருகிறார்கள் இவர்களில், இந்தியாவில் இருந்து அனைத்து துறைகளையும் சேர்த்து 3796 விஞ்ஞானிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
தேசிய செய்திகள்
பிரெய்லி வடிவில் 46 தமிழ் நூல்கள் உருவாக்கபட்டுள்ளது
- பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் படித்து பயன்பெறும் வகையில் திருக்குறள், தொல்காப்பியம் உள்ளிட்ட 46 தமிழ் நூல்கள்,பிரெய்லி வடிவில் உருவாக்கப்பட்டுள்ளதாக செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.
- கடந்த மார்ச்சில் தொடங்கப்பட்ட இப்பணிகள் வரும் டிசம்பரில் முடிவடைந்த பின்னர், நூல்கள் அச்சிடப்பட்டு, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் விளையாட்டு ஹெல்மெட் சோதனை மையம்
- ஒவ்வொரு ஆண்டும் மீரட் நகரில் ஆயிரக்கணக்கான விளையாட்டு ஹெல்மெட்களை உற்பத்தி செய்கிறது.மேலும் அதன் தரச் சான்றிதழுக்காக இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு சோதனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது.
- அதனை தவிர்க்கும் வகையில் மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகம், நாட்டின் முதல் விளையாட்டு ஹெல்மெட் சோதனை வசதியை மீரட்டில் அமைக்க உள்ளது.
PMBJUP -ஒரே நாடு ஒரே உரம் திட்டம்
- பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஊர்வரக் பரியோஜனா – ஒரே நாடு ஒரே உரம் – என்ற புதிய திட்டத்தின் கீழ் நிறுவனங்கள் அனைத்து மானிய உரங்களையும் ‘பாரத்’ என்ற ஒற்றை பிராண்டின் கீழ் சந்தைப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
- மேலும் 600 PM கிசான் சம்ருத்தி கேந்திராக்களை (PM-KSK) பிரதமர் மோடி திறந்து வைத்தார், நாட்டில் உள்ள 3.3 லட்சத்திற்கும் மேற்பட்ட உர சில்லறை விற்பனைக் கடைகளை படிப்படியாக PM-KSK ஆக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மீன் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது
- சீனாவிற்கு அடுத்தபடியாக உலகில் 3வது பெரிய மீன் உற்பத்தி மற்றும் 2வது பெரிய மீன் வளர்ப்பு நாடாக இந்தியா உள்ளது
- PMMSY திட்டமானது 2024-25 ஆம் ஆண்டிற்குள் 22 மில்லியன் டன் மீன் உற்பத்தியை எட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், 55 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,மேலும் (பிஎம்எம்எஸ்ஒய்) திட்டத்தின் கீழ் மாநிலத்திற்கு 734.77 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
- PMMSY-PRADHAN MANTRI MATSYA SAMPADA YOJANA
இந்தியாவின் முதல் அரை-அதிவேக விரைவு ரயில் போக்குவரத்து அமைப்பு
- இந்தியாவின் முதல் அரை-அதிவேக இரயில் போக்குவரத்து அமைப்பு டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் ஆட்டோமேஷன் தொழில்நுட்பங்களில் உலகளாவிய முன்னணி நிறுவனமான Alstom-ஆல் செயல்படத் தயாராக உள்ளது.
- இச்சேவை, டெல்லி-காசியாபாத்-மீரட் நடைபாதையின் முன்னுரிமைப் பிரிவான சாஹிபாபாத் மற்றும் துஹாயை இணைக்கிறது.
- RRTS திட்டமானது சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதையும், தேசிய தலைநகர் பிராந்தியத்தின் சீரான மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- Regional Rapid Transit System
ஒருங்கிணைந்த ஓய்வூதியர்களுக்கான இணையதளம் தொடக்கம்
- அக்டோபர் 18 ஆம் தேதி புது தில்லியில் நடைபெறவுள்ள அனுபவ விருது வழங்கும் விழாவில் ஒருங்கிணைந்த ஓய்வூதியர்களுக்கான இணையதளத்தை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கினார்.
- ஓய்வூதியர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான ஒற்றைச் சாளரமான ஒருங்கிணைந்த ஓய்வூதியதாரர்களின் போர்ட்டலை அமைச்சர் தொடங்குகிறார்.
மாநில செய்திகள்
தமிழக காவல்துறையில் ‘ஸ்மார்ட் காவலர்’ செயலி- அறிமுகம்
- காவல் துறையினரின் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் ‘ஸ்மார்ட் காவலர்’ என்ற புதிய செயலியை டி.ஜி.பி. சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார்.
- ‘ஸ்மார்ட் காவலர்’ செயலி, காவல் துறையில் களப்பணியாற்றும் அலுவலர்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காகவும், களப்பணியின்போது நிகழும் சம்பவங்களை உடனுக்குடன் பதிவு செய்வதற்காகவும், கள அலுவலர்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டாலோ அல்லது உடனடி உதவிகள் தேவைப்பட்டாலோ அது குறித்த செய்தியை உடனடியாக உயர் அலுவலர்களுக்கு தெரிவிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியில் MBBS படிப்பு தொடக்கபட்டுள்ளது
- இந்தியாவில் முதல் முறையாக மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் இந்தியில் எம்பிபிஎஸ் படிப்பை மத்திய உள்துறை மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் திரு அமித் ஷா தொடங்கி வைத்தார்.
- பிரதமர் நரேந்திர மோடியின் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்திய முதல் மாநிலம் மத்தியப் பிரதேசமாக உள்ளது இதுவரை நாட்டில் 2014-ல் 387 மருத்துவக் கல்லூரிகள் இருந்தன, இன்று அவை 596 ஆகவும்,IIT-கள் 16-லிருந்து 23 ஆகவும், IIM-கள் 13-லிருந்து 20 ஆகவும், IIIT-கள் 9-லிருந்து 25 ஆகவும் உயர்ந்துள்ளன.
இந்தியாவில் முதல் அலுமினியம் சரக்கு ரேக் அறிமுகம்
- இந்தியாவில் புவனேஸ்வர் ரயில் நிலையத்தில் முதல் அலுமினிய சரக்கு ரேக் – 61 BOBRNALHSM1 ஐ ஸ்ரீ அஷ்வினி வைஷ்ணவ் திறந்து வைத்தார்
- ரயில்வே, பெஸ்கோ லிமிடெட் வேகன் பிரிவு மற்றும் ஹிண்டால்கோ ஆகியவற்றின் கூட்டு முயற்சிகளால் இது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது.
நியமனம்
சுவீடனின் மிதவாதக் கட்சித் தலைவர் உல்ஃப் கிறிஸ்டர்சன் பிரதமராக நியமிக்கப்பட்டார்
- பழமைவாத மிதவாதக் கட்சித் தலைவரான உல்ஃப் கிறிஸ்டெர்சன் ஸ்வீடனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் முதல் முறையாக தீவிர வலதுசாரி ஸ்வீடன் ஜனநாயகக் கட்சியினரால் ஆதரிக்கப்பட்டார்.
- 59 வயதான திரு. கிறிஸ்டர்சன் 176-173 வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஒடிசா அரசு நில ஆணையத்தை மறுசீரமைத்து அதன் தலைவராக வருவாய் வாரிய உறுப்பினரை நியமித்தது
- ஒடிசா அரசு நில ஆணையத்தை மறுசீரமைத்து அதன் தலைவராக வருவாய் வாரிய உறுப்பினரை நியமித்துள்ளது. மேலும் போக்ராய் எம்எல்ஏ ஆனந்த தாஸ் மற்றும் பர்ஜாங் எம்எல்ஏ ந்ருசிங் சரண் சாஹு ஆகியோர் ஆணையத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
- ஆணையத்தின் மற்ற உறுப்பினர்களான நில ஆவணங்கள் மற்றும் ஆய்வு இயக்குநர், ஓய்வுபெற்ற OAS அதிகாரிகள் பிபூதி பூசன் தாஸ் மற்றும் சுதன்சு சேகர் புயான் நியமிக்கப்பட்டுள்ளனர் மேலும் நில சீர்திருத்த ஆணையர் உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டு செய்திகள்
ஐஎஸ்எஸ்எப் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி 2022
- எகிப்தின் கெய்ரோவில் நடந்து வரும் ஐஎஸ்எஸ்எப் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய ஆடவர் அணி 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
- ருத்ராங்க்ஷ் பாட்டீல், அர்ஜுன் பாபுதா மற்றும் கிரண் ஜாதவ் அடங்கிய இந்திய அணி இறுதி போட்டியில் சீனா அணியை வீழ்த்தி உலக சாம்பியன் பட்டத்தை வென்றது. உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஐந்தாவது தங்கப் பதக்கம் இதுவாகும்.
AIM செஸ் ரேபிட் போட்டி
- இந்திய கிராண்ட்மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி, AIM செஸ் ரேபிட் ஆன்லைன் செஸ் போட்டியின் 7-வது சுற்றில் உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார்.
- போட்டியின் 54-வது நகர்த்தலின் போது அர்ஜுன் வெற்றியை வசமாக்கினார். இது கார்ல்சனுக்கு எதிராக அர்ஜுன் எரிகைசி பெறும் முதல் வெற்றியாகும்.
முக்கிய தினங்கள்
வறுமை ஒழிப்புக்கான சர்வதேச தினம் 2022
- ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17 ஆம் தேதி, வறுமைக் கோட்டுக்குக் கீழே (பிபிஎல்) வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்கள் பல்வேறு சூழ்நிலைகளால் போராடி மற்றும் முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
- இந்த ஆண்டு வறுமை ஒழிப்புக்கான சர்வதேச தினத்தின் கருப்பொருள் “நடைமுறையில் அனைவருக்கும் கண்ணியம்” என்பதாகும்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்