இன்று முதல் கூடுதல் ஊரடங்கு தளர்வுகள் அமல் – மாநில அரசு அறிவிப்பு!
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கேரளா மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் ஊரடங்கில் புதிய தளர்வுகளை இன்று முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக கேரளா அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவல்:
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. அதன் பின்னர் மத்திய மாநில அரசின் துரித நடவடிக்கை காரணமாக கொரோனா பரவல் கணிசமாக குறைந்துள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் முதல் கேரளா மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக டெல்டா வைரஸ் தாக்கம் அதிகமாக பரவியது. இதனால் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.
தமிழகத்தில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம் – பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை!
இந்நிலையில் கொரோனா பரவல் சற்று குறைந்து வரும் நிலையில் தற்போது புதிய தளர்வுகளை இன்று முதல் கேரளா அரசு அறிவித்துள்ளது. அதன் படி,
- கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி வணிக வளாகங்களை வரும் 11 ஆம் தேதி முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- ஏசி இல்லாத ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
- மாநிலத்தில் தற்போது ஞாயிற்றுக் கிழமைகளில் அமலில் உள்ள முழு ஊரடங்குக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டு உள்ளது.
TN Job “FB Group” Join Now
- பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு கொரோனா கட்டுப்பாடு விதிகளுக்கு உட்பட்டு செல்ல இன்று முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.
- சுற்றுலா பயணிகள் கடற்கரைகளுக்கு செல்ல தடையில்லை. அதே சமயம், நீர்வீழ்ச்சிகளில் குளிப்பதற்கு அனுமதியில்லை.
- சுற்றுலா வருபவர்கள் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்து இரு வாரங்கள் ஆகியிருக்க வேண்டும்.
- தடுப்பூசி செலுத்தாதவர்கள் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்டி-பிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.