ஜூலை 5 வரை கூடுதலாக 4 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வுகள் – மாநில அரசு அறிவிப்பு!
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா தடுப்பு தொடர்பான கட்டுப்பாடுகளில் இருந்து, கூடுதலாக 4 மாவட்டங்களுக்கு தளர்வுகளை அளிக்க அரசு முடிவெடுத்துள்ளது. அதன் படி கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்
கர்நாடகா மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா முழு ஊரடங்கில் இருந்து சில தளர்வுகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று (ஜூன் 22) அறிவிக்கப்பட்டுள்ளபடி, கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள நான்கு மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. இந்த தளர்வுகளில் குளிரூட்டப்பட்ட கடைகள் தவிர மற்ற அனைத்து அத்தியாவசிய கடைகளும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் திறப்பு? மாநில வாரியான விவரங்கள்!
அந்த வகையில் குளிரூட்டப்பட்ட ஷாப்பிங் வளாகங்கள் மற்றும் மால்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வருவாய் துறை முதன்மை செயலாளர் என்.மஞ்சுநாத பிரசாத் கூறுகையில், ‘கர்நாடகா மாநிலத்தில் தட்சிணா கன்னடம், ஹாசன், தாவணகேர், மற்றும் சாமராஜனகர உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாகவும், அவை ஜூலை 5 ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை அமலில் இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
மேலும், ‘கர்நாடகாவின் சில மாவட்டங்களில் உள்ள தற்போதைய கொரோனா நிலைமையை கணக்கிட்ட பின்னர், மாநில செயற்குழு தலைவர், பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005 இன் பிரிவு 24 இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்தி, குளிரூட்டப்பட்ட கடைகளைத் தவிர மற்ற அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை செயல்பட அனுமதித்துள்ளார்’ என அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக அம்மாநிலத்தில் கொரோனா அதிகரித்து வந்ததை கருத்தில் கொண்டு ஏப்ரல் 27 முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அவை ஜூலை 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.