கொரோனா பரவல் எதிரொலியாக 4 வாரங்கள் வரை ஊரடங்கு நீட்டிப்பு – இங்கிலாந்து அரசு அறிவிப்பு!
கொரோனா வைரஸின் புதிய வகையான டெல்டா வேரியன்ட் வைரஸ் அதிகமாக பரவி வருவதன் காரணமாக இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு ஒரு மாத காலம் தாமதமாகும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு தளர்வுகள்:
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் உலகெங்கிலும் பரவிய கொரோனா தொற்று காரணமாக உலக நாடுகள் பல ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்தது. இதை தொடர்ந்து இரண்டாம் அலையாக பல்வேறு விதங்களில் உருமாறி, அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸால், பல நாடுகள் முழு ஊரடங்கு விதிமுறையை மீண்டுமாக கையில் எடுத்துள்ளது. அந்த வகையில் கொரோனா வைரஸின் புதிய வகையான டெல்டா வேரியன்ட் இங்கிலாந்தில் அதிகளவு பாதிப்புகளை உருவாக்கி வருகிறது.
TN Job “FB Group” Join Now
அதனால் நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு, ஜூலை 19 ஆம் தேதி வரை அதாவது 4 வாரங்கள் தாமதமாகும் என பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். இதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் போரிஸ் ஜான்சன் ‘தீவிரமடையும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த 4 வாரங்கள் முழு ஊரடங்கு தேவைப்படுகிறது.
பழைய 1 ரூபாய் நாணயத்திற்கு ரூ.25 லட்சம் பெறலாம் – தவறாமல் படிங்க!
ஏனெனில் நாடு முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் முழுமையாக தடுப்பூசி எடுத்துள்ளனர். அதனால் ஊரடங்கில் இருந்து தளர்வுகளை ஒரு மாத காலம் ஆகலாம்’ என தெரிவித்துள்ளார். அந்த வகையில் ஊரடங்கு தளர்வுகளை அளிக்க திட்டமிட்டிருந்த இங்கிலாந்து அரசு அதற்காக அனைத்து அறிவிப்புகளையும் திரும்ப பெற்றுக்கொண்டது. மேலும் வணிகங்கள், பொழுதுபோக்கு உள்ளிட்ட நிறுவனங்கள் பல அரசின் முடிவுக்கு எதிராக தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.