தமிழகம் முழுவதும் அமலாகும் முழு ஊரடங்கு – மார்க்கெட்டுகளில் குவிந்த மக்கள்!
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாளை ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாட்டு பொங்கல் நாளான இன்று (ஜன.15) சென்னை காசிமேடு மீன் சந்தையில் மக்கள் கூட்டமாக குவிந்தனர்.
ஊரடங்கு:
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமிக்ரான் தொற்று பாதிப்புகள் தீவிரமாக பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை மாநிலம் முழுவதும் 100 க்கும் மேற்பட்டோருக்கு ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். அதனால் மாவட்ட நிர்வாகங்கள் மீண்டும் தடுப்பு பணியாக பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் பொது இடங்களில் செல்வர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு புதிய கட்டுப்பாடுகளை விதித்தார்.
சன் டிவி ‘ரோஜா’ சீரியலில் இருந்து இடைவெளி எடுத்த பிரியங்கா – குடும்பத்துடன் கோலாகல கொண்டாட்டம்!
புதிய கட்டுப்பாடுகளாக உணவகங்கள் மற்றும் திரையரங்குகளில் 50% பேர் மட்டுமே அனுமதிகைப்பட வேண்டும். பொது இடங்களில் கூட்டம் கூட கூடாது. அரசு மற்றும் சமூக கலாச்சார விழாக்கள் நடத்த கூடாது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து தடுப்பு நடவடிக்கையாக இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கும் விதிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அகவிலைப்படி மற்றும் சம்பள உயர்வு!
இந்த நிலையில் நாளை (ஜன.16) ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு என்பதால் மாட்டு பொங்கல் தினமான இன்று சென்னை காசிமேடு மீன் சந்தையில் மக்கள் மீன்கள் வாங்க குவிந்தனர். காலை முதலே மக்கள் கூட்டம் அப்பகுதியில் அதிகரித்து காணப்படுகிறது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் இந்த நேரத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் ஒன்று கூடுவது தொற்று பரவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தொற்று விரைவாக பரவும் வாய்ப்பையும் அதிகரித்துள்ளது.