மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அகவிலைப்படி மற்றும் சம்பள உயர்வு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் - அகவிலைப்படி மமற்றும் சம்பள உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் - அகவிலைப்படி மமற்றும் சம்பள உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அகவிலைப்படி மற்றும் சம்பள உயர்வு!

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை தொடர்ந்து சம்பள உயர்வு கிடைக்கும் செய்தி வெளியாகி உள்ளது. இந்த செய்தி அரசு ஊழியர்கள் மத்தியில் பெறும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சம்பள உயர்வு:

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் அதிகரித்து வரும் விலைவாசிக்கு ஏற்ப அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு பரவி கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி தொகை வழங்கப்படவில்லை. இத்தொகையானது நோய் தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டது. அதன் பிறகு ஓரளவு தொற்று பாதிப்பு குறைய ஆரம்பித்ததும் அகவிலைப்படி உயர்வு வேண்டி கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்து ஆலோசிக்கப்பட்டு முதல் கட்டமாக அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

மாநில அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசாக 3% அகவிலைப்படி (DA) உயர்வு – முழு விவரம் இதோ!

அதனை தொடர்ந்து பிறகு 3% உயர்த்தப்பட்டு தற்போது 31% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு 2021 ஜூலை மாதம் முன்தேதியிட்டு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுகின்றனர். இந்த நிலையில் 2022ம் ஆண்டு தொடங்கியுள்ளதை அடுத்து சதவீதம் அல்லது 3 சதவீதம் உயர்த்தப்படும். சம்பள உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளியான தகவலின்படி தற்போது 3% அகவிலைப்படி உயர்வு அளித்தால் மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% ஆக அகவிலைப்படி உயரும்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இனி முல்லையாக புதிய நடிகை அறிமுகம் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!

மேலும் 34% அகவிலைப்படி மாதம் 18,000 சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு ரூ.6,120 வரை சம்பள உயர்வு கிடைக்கும். அடிப்படை சம்பளம் ரூ.56,900 பெறும் ஊழியர்களுக்கு 34 சதவீத அகவிலைப்படி மாதம் ரூ.19,346 சம்பள உயர்வு கிடைக்கும். மேலும் வரும் நாட்களில் பட்ஜெட் 2022 க்கு முன் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் பற்றிய கலந்தாலோசனைகளும் நடைபெற உள்ளது. அதில் சம்பள உயர்வு குறித்து முடிவு எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!