டெபிட், கிரெடிட் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு!

0
டெபிட், கிரெடிட் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு - ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு!
டெபிட், கிரெடிட் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு - ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு!
டெபிட், கிரெடிட் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு!

இந்தியாவில் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளின் விவரங்களை பண பரிமாற்ற நிறுவனங்கள், முகமைகள் பதிவு செய்யக்கூடாது என்று ரிசர்வ் வங்கியின் விதித்த உத்தரவு 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

காலக்கெடு:

தற்போதைய நவீன உலகில் அனைத்து வேலைகளும் இணையத்தளம் வாயிலாக செய்யப்பட்டு வருகிறது. இதனால் மக்களுக்கு நேரமும் வேலையும் மிச்சமாகிறது. அதிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கின் போது மக்கள் வெளியே செல்ல அரசு தடை விதித்தது. மேலும் பொது மக்களும் தொற்று அச்சத்தால் வெளியே செல்ல தயக்கம் காட்டினார். இந்த நேரத்தில் ஆன்லைன் ஷாப்பிங் அதிகரித்தது. இந்த ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் நெட் பேங்கிங் மூலம் நமது டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பணம் செலுத்தலாம்.

டிச.25 முதல் இரவு ஊரடங்கு, தீவிர கட்டுப்பாடுகள் அமல் – மாநில அரசு அறிவிப்பு!

இந்த வசதி வாடிக்கையாளர்களுக்கு மிகவும் எளிதான ஒன்றாக இருந்ததால் ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் அதிகரித்தது. நாம் நெட் பேங்கிங் மூலம் நாம் பொருட்கள் வாங்கும் நிறுவனத்தின் இணையதளத்தில் பணம் செலுத்தும் போது நமது வங்கி கணக்கு எண் மற்றும் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களை பதிவு செய்வது அவசியமாகும். முதல் முறை பதிவு செய்ய வேண்டும். அடுத்தடுத்து தானாகவே பதிவிடும் இந்த முறை வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்துவதாக கருதப்பட்டது. இது குறித்து ரிசவ் வங்கியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இன்று (டிச.24) முதல் 6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

இதையடுத்து வாடிக்கையாளர்களின் டெபிட், கிரெடிட் கார்டுகளின் விவரங்களை தானாகவே பதிவு செய்வதை தடை செய்ய வேண்டும் என்றும் ஜனவரி 1ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. இந்த நிலையில் வங்கிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு தயாராக கால அவகாசம் தேவைப்பட்டதால் டெபிட், கிரெடிட் கார்டுகளின் விவரங்களை பண பரிமாற்ற நிறுவனங்கள் மற்றும் முகமைகள் பதிவு செய்யக்கூடாது என்ற ரிசர்வ் வங்கியின் உத்தரவை அமல்படுத்த காலகெடு 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!