கொரோனா பரவல் எதிரொலி.. மீண்டும் முகக்கவசம் கட்டாயம் – மாநில அரசு அதிரடி உத்தரவு!!
சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இந்தியாவின் இந்த மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவல்களை இப்பதிவில் பார்ப்போம்.
கொரோனா பரவல்
இந்தியாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசி செலுத்தியதன் காரணமாக தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளது. ஆனால் கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் தற்போது இந்தியாவிலும் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கர்நாடகா மாநிலத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
மேலும் இது குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கூறியிருப்பதாவது, மாநிலத்தில் உள் அரங்குகள் மற்றும் ஏசி ரூம்களில் பணிபுரிபவர்கள் முகக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும். அத்துடன் சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏதேனும் இருப்பின் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக மாணவர்களுக்கு குஷி தான்.. அரையாண்டு விடுமுறை குறித்து பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு!
Exams Daily Mobile App Download
இதனை தொடர்ந்து, தொற்று பரவலை தடுக்கும் விதமாக, விமான நிலையத்தில் சர்வதேச பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். அத்துடன் அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கொரோனா வார்டுகளை அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் தீவிரப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.