அனைத்து மண்டல அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த மாநகராட்சி – காரணம் இது தான்!!
சென்னையில் வலுவற்ற மரங்கள், கிளைகளை அகற்றும் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
கட்டுப்பாட்டு அறை:
சென்னையில் பல்வேறு இடங்களில் வலுவற்ற மரங்கள், கிளைகள் உள்ளதால் இதனை உடனடியாக அகற்ற வேண்டும் என மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த பணியை துரிதப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. மேலும் சென்னையில் நிர்வாக வசதிக்காக சட்ட சபை தொகுதிக்கேற்ப மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டலங்களை கண்காணிக்க மண்டல அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Follow our Instagram for more Latest Updates
தற்போது சென்னை மாநகராட்சி அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவில், சென்னையில் வலுவற்ற நிலையில் இருக்கும் மரங்கள், கிளைகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்றும் இதனை அனைத்து மண்டல அதிகாரிகளும் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினசரி 2 GB டேட்டா.. குறைவான கட்டணத்தில் Best Recharge Plans – Airtel,Jio, VI, BSNL எது சிறந்தது?
Exams Daily Mobile App Download
இதனை தொடர்ந்து, மண்டல வாரியாக அமைக்கப்பட்டுள்ள அனைத்து கட்டுப்பாட்டு அறைகளும் 24 மணி நேரமும் செயல்படுமாறு அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் வலுவற்ற நிலையில் இருக்கும் மரங்கள், கிளைகளை அகற்ற மர அறுவை எந்திரம், மரங்களை வெட்டி அகற்றும் எந்திரம் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.