இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு… முகக்கவசம் அணிவது கட்டாயம் – அதிரடி உத்தரவை வெளியிட்ட கேரளா!!
சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் தற்போது கேரள மாநிலத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதனால் கேரளா அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த அதிரடி உத்தரவு ஒன்றை அம்மாநில அரசு பிறப்பித்துள்ளது.
கொரோனா பரவல்:
சீனாவில் சமீப காலமாக கொரோனாவால் பாதிக்கப்படுபவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதில் அச்சுறுத்தலான விஷயம் என்னவென்றால் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில் கேரள மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
அதனால் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கேரளா அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இது தொடர்பான வெளியிட்ட அறிக்கையில், மாநிலத்தில் பொது இடங்களில் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவித்துள்ளது. மேலும் பொது போக்குவரத்துகளான அரசு பேருந்துகள் மற்றும் தனிநபர் வாகனங்களில் செல்வோர் முகக்கவசத்தை கட்டாயமாக அணிய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியீடு!!
அத்துடன் பணியாற்றும் இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் அனைவரும் தனிநபர் இடைவெளியை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இந்த நடைமுறை ஜனவரி 12-ம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு மாநிலத்தில் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.