மீண்டும் ஜெட் வேகத்தில் கொரோனா பாதிப்பு – அதிர்ச்சி ரிப்போர்ட்! கட்டுப்பாடுகள் அமல்!
தமிழகத்தில் கொரோனா தொற்று முதல், 2ம் மற்றும் 3ம் அலை என்று வரிசையாக பாதிப்புகளை ஏற்படுத்தி வந்த நிலையில், சமீபத்தில் தான் பாதிப்புகள் குறைந்து இயல்பு நிலை திரும்பியது. இந்நிலையில், மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படுவது அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பு:
உலகம் முழுவதையும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டி படைத்து வரும் கொரோனா தொற்றை இன்று வரை ஒட்டுமொத்தமாக கட்டுப்படுத்த முடியவில்லை. கொரோனா தொற்றின் பாதிப்புகள் அதிக அளவில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி மக்களை நிலை குலைய வைத்து விட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவத் தொடங்கிய ஆரம்ப நாட்கள் முதல் இன்று வரை தகுந்த பாதுகாப்பு கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, முதல் அலையை காட்டிலும், அடுத்தடுத்த வந்த 2 மற்றும் 3ம் அலைகளில் கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்தில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. சமீபமாக, சில மாதங்களுக்கு முன்பு தான் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களின் வழக்கமான செயல்பாடுகளுக்கு அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில், அதிர்ச்சி அளிக்கும் வகையில், கடந்த 2 நாட்களாக சென்னையில் கொரோனா பாதிப்பு தினசரி எண்ணிக்கை அதிக அளவில் பதிவாகி வருகிறது. இதனை உடனடியாக கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
குட் நியூஸ்.. இந்தியாவில் 13 நகரங்களில் மாஸாக வரவிருக்கும் 5ஜி சேவை – மத்திய அமைச்சர் முக்கிய தகவல்!
Exams Daily Mobile App Download
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை 1,10,34,921 தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட போதிலும், மேலும், நோய் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், இனி வரும் நாட்கள் பண்டிகை காலமாக உள்ளது. இதனால் மக்கள் வெளியில் செல்லும் போது தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முகக்கவசம் அணிவது போன்றவற்றை முறையாக செய்ய வேண்டும். தொற்றின் அறிகுறிகள் இருப்பின் முறையாக மருத்துவரை அணுகி தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், சுய சிகிச்சையை தவிர்க்க வேண்டும் என்றும் மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்