தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல் – ஊரடங்கு அமல்? பொதுமக்கள் அச்சம்!
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதனால் மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
கொரோனா பரவல்:
தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் தொற்று பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தினசரி நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தது. இதனை கட்டுப்படுத்த அரசு நோய்த் தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டியது. அதன்படி ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு முயற்சித்தது. பொதுமக்கள் வைரஸ் தாக்கத்தில் இருந்து மீண்டு வர முடியாமல் சிரமப்பட்டு கொண்டிருந்த நேரத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கத் தொடங்கியது.
Exams Daily Mobile App Download
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தடுப்பூசி பயன்பட்டால் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை குறைந்தது. அதனால் மக்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதனால் மக்கள் இயல்பு நிலை நோக்கி திரும்பி வந்தனர். இந்த சூழலில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. சென்னையில் 9, 13 வது மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.
தமிழகத்தில் அமலுக்கு வரும் புதிய நடைமுறை – பொது இடத்தில் ‘இதை’ செய்தால் அபராதம்!
மேலும் ஐடி, அண்ணா பல்கலைக்கழகம்,போன்ற இடங்களில் வெளிமாநிலங்களில் இருந்து மாணவர்கள் வருவதால் கொரோனா தொற்று அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் விமான நிலையங்களில் கொரோனா மற்றும் குரங்கு காய்ச்சல் பரிசோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜூன் மாதம் கொரோனா நான்காவது அலை பரவும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ள நிலையில் தற்போது பாதிப்புகள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.