நாளுக்கு நாள் வீரியமடையும் கொரோனா – முகக்கவசம் கட்டாயம்!!
ஸ்பெயின் நாட்டில் கொரோனா பரவல் அதிகமாகி வருவதால் கட்டாயமாக பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா:
இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் மீண்டும் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக துவங்கிவிட்டது. இதனால், அனைத்து மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் தொற்று பரவலின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஸ்பெயின் நாட்டில் காய்ச்சல், கொரோனா மற்றும் பிற சுவாச நோய்கள் அதிகரித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
இதனால், கொரோனா மற்றும் சுவாச நோய்களின் தாக்கத்தை குறைக்கும் பொருட்டு இன்று முதல் அனைத்து மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டின் வெலெனிக்கா, கடலொனியா, முர்சியா ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் பொது இடங்களிலும் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், சமூக இடைவெளியை பின்பற்றும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.