தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு – கல்வித்துறை அதிகாரிகள்!

0
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு - கல்வித்துறை அதிகாரிகள்!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு - கல்வித்துறை அதிகாரிகள்!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு – கல்வித்துறை அதிகாரிகள்!

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் கடந்த நவ.1 ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. அதனால் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் முறையே கடைபிடிக்குமாறு வலியுறுத்தபட்டுள்ளது.

பாதுகாப்பு நெறிமுறை:

நாடு முழுவதும் கடந்த ஆண்டு பரவிய கொரோனா தொற்றால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மாணவர்களின் கற்றலில் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் கடந்த செப்.1 ம் தேதி உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் சில நாட்கள் கொரோனா தொற்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பரவலாக பாதிப்பு நிலவியது.

இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோர் கவனத்திற்கு – நவ.30க்குள் இலக்கு நிர்ணயம்!

பின்னர் தகுந்த பாதுகாப்பு நெறிமுறைகளை பள்ளிகளில் கடைபிடித்தலை கட்டாயப்படுத்தியதன் மூலம் தொற்று படிப்படியாக குறைய தொடங்கியது. அதாவது தினசரி மாணவர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல், சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிதல் போன்றவற்றை பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையே கடைபிடித்தனர். பின்னர் மாணவர்களின் பெற்றோர் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டது. அவ்வாறு செயல்பட்டதால் மட்டுமே பாதிப்புகள் முற்றிலும் குறைக்கப்பட்டன.

TNPSC குரூப் 4 VAO போட்டித்தேர்வு – பாடத்திட்டம், தேர்வு முறைகள் குறித்த விவரங்கள்!

9 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த நவ.1 ம் தேதி தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் திறப்பதற்கு முன்பே பாதுகாப்பு நடவடிக்கைகள் பள்ளி வளாகங்களில் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும் கூட கடந்த நவ.3 ம் தேதி ஒரே அரசுப் பள்ளியில் மட்டும் 6 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதனால் தொற்று இன்னும் நம்மை விட்டு விலகவில்லை. எனவே மாணவர்களை முறையே கண்காணிப்பது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கடமை. மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் பெற்றோர் அலட்சியம் காட்ட வேண்டாம் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!