தமிழகத்தில் இன்னும் 2 வாரங்களில் கொரோனா உச்சம் எட்டும் – அமெரிக்க ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை!!
தமிழகம் தற்போது எதிர்கொண்டு வரும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை இன்னும் இரண்டு வாரங்களில் உச்சத்தை அடையும் என அமெரிக்க ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா தாக்கம்
கொரோனா பரவலின் இரண்டாம் அலை நாடு முழுவதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக நாள் தோறும் 4 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். தவிர ஒரு நாளைக்கு 4 ஆயிரம் வரை இறப்பு எண்ணிக்கை பதிவு செய்யப்படுகிறது. தமிழகத்திலும் கொரோனா தாக்கம் சற்று உயர்ந்து வருகிறது. நாளொன்றுக்கு 30 ஆயிரத்துக்கும் மேல் கொரோனா பாதிப்பு பதிவு செய்யப்படுகிறது. இந்த நிலை நீடித்தால் இன்னும் 2 வாரங்களில் தமிழகத்தில் கொரோனா தாக்கம் உச்சத்தை எட்டும் என அமெரிக்காவின் சுகாதார மதிப்பீடு ஆய்வு நிறுவனம் (IHME) தற்போது எச்சரித்துள்ளது.
பாரதியார் பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து – கொரோனா பரவல் எதிரொலி!!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொடும் போது, உயிரிழப்போர் எண்ணிக்கையும் ஒருநாளைக்கு 850ஆக உயரும் எனவும் அந்நிறுவனம் கணித்துள்ளது. இந்த நிறுவனங்கள் எச்சரித்துள்ள படியான சூழல் உருவாகாதவாறு பொது மக்கள் முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
TN Job “FB Group” Join Now
மேலும் கொரோனா தொற்று பரவுவதை தடுத்து மக்களை காப்பாற்ற தடுப்பூசி செலுத்துவது மட்டுமே சிறந்த வழி எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே போல ஐஐடி கான்பூர் கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்களும், இந்தியாவில் மே மாத இடையில் கொரோனாவின் தாக்கம் பலமடங்கு அதிகரிக்கும் என கூறுகிறார்கள். எனவே அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மக்கள் முழுமையாக பின்பற்றி விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முடியும்.