மாநிலத்தில் அனைத்து விதமான கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கம் – இன்று அறிவிப்பு வெளியீடு!
அசாம் மாநிலத்தில் தற்போதைய கொரோனா தொற்று நிலைமையை ஆய்வு செய்த அரசு இரவு ஊரடங்கு உத்தரவு மற்றும் பொது கூட்டங்களுக்கான அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் திரும்ப பெற்றுக்கொள்வதாக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு நீக்கம்
மாநிலம் முழுவதும் கொரோனா புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்திருக்கும் நிலையில், கொரோனா தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளும் திரும்ப பெறப்படுவதாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்திருக்கிறார். இது குறித்த விரிவான அறிவிப்பு இன்று (பிப்.14) வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இரவு நேர ஊரடங்கு உத்தரவு, விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் உள்ள கட்டாய பரிசோதனை வசதிகள், சமூக மற்றும் மதக் கூட்டங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் திரும்பப் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 15 நாட்களுக்கு ஊரடங்கு – பிப்.16 முதல் கூடுதல் தளர்வுகள் அமல்!
இது தொடர்பாக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா வெளியிட்டுள்ள ட்வீட்டில், ‘பிப்ரவரி 15 முதல் விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் உள்ள அனைத்து கொரோனா தொடர்பான கட்டாய சோதனை வசதிகளையும் அரசு திரும்ப பெறும். மேலும், இரவு ஊரடங்கு உத்தரவு, சமூக மற்றும் மதக் கூட்டங்கள் ஆகியவற்றுக்கான அனைத்து கட்டுப்பாடுகளும் திரும்பப் பெறப்படுகிறது. பிப்ரவரி 14 அன்று விரிவான அறிவிப்பு வெளியாகும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழகத்தில் நாளை மறுநாள் (பிப்.16) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
இதற்கிடையில் அசாம் மாநிலத்தில் புதிய கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை சரிவடைந்து வரும் நிலையில் நேற்று (பிப்.13) ஒரு நாளில் மட்டும் 172 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கை முந்தைய நாளை விட 95 என்ற அளவில் குறைவாக இருப்பதாக தேசிய சுகாதார இயக்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அசாம் மாநிலத்தில் கொரோனா நேர்மறை சதவீதம் 0.83 சதவீதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 98.56 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.