சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – மீண்டும் கட்டுபாடுகள் அமல்.. மாநகராட்சி விளக்கம்!
சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இது குறித்து சென்னை மாநகராட்சி தற்போது விளக்கம் அளித்துள்ளது.
கட்டுப்பாடுகள்:
தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்துள்ள XXB வகை வைரஸ் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக தலைநகர் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக உயர்ந்து வருகிறது.
தூத்துக்குடி மாநகரில் கனரக வாகனங்கள் செல்ல தடை – மாவட்ட ஆட்சியர் புதிய உத்தரவு!
இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க சென்னையில் மீண்டும் கட்டுப்பாடுகள் தீவிரபடுத்தப்படவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இந்த தகவல்கள் பொது மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தற்போது மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அதாவது சென்னையில் கொரோனா கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படாது. அதனால் இது குறித்து சமூக வலைதளத்தில் வரும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் வேகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download