நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு, ஆசிரியர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் – மாநில அரசு அறிவிப்பு!
கேரளா மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் நவம்பர் 1 முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க உள்ள நிலையில் பல கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார். இதனை மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
பள்ளிகள் மீண்டும் திறப்பு:
கேரளா மாநிலத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வந்துள்ளது. இதனால் வரும் நவம்பர் 1ம் தேதி முதல் 1 முதல் 7ம் வகுப்பு மற்றும் 10 மற்றும் 12 வகுப்புகளுக்கு பள்ளிகளை மீண்டும் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான அறிவுறுத்தல்களை அரசு வெளியிட்டு உள்ளது. இந்நிலையில், மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், பல கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளார். பள்ளிகள் அரசின் அறிவுறுத்தல்களை முறையாக கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக 10ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு அலகுத்தேர்வு – ஆசிரியர்கள் அதிர்ச்சி!
அதன்படி, பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பு அனைத்து ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களும் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளின் போக்குவரத்துக்காக பள்ளிகள் பயன்படுத்தும் வாகன ஓட்டுனர்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும். ஒரு வகுப்பில் உள்ள மாணவர்கள் இரண்டு முதல் மூன்று குழுக்களாக பிரிக்கப்படுவார்கள். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குழு மட்டுமே வகுப்புகளில் கலந்து கொள்வார்கள். ஒரே குடியிருப்பு பகுதியை சேர்ந்த மாணவர்கள் ஒரே குழுவில் சேர்க்கப்படுவார்கள்.
ஒரு குழுவில் உள்ள மாணவர்கள் எந்த காரணத்தை கொண்டும் மற்ற குழு மாணவர்களுடன் நெருங்கி தொடர்பு கொள்ளக்கூடாது. ஒரு குழுவில் உள்ள ஒரு மாணவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் மீதமுள்ள மாணவர்களும் தனிமைப்படுத்தப்படுவார்கள். மேலும், மாணவர்கள் பள்ளிக்கு வரும் போது பெற்றோரின் அனுமதி கடிதத்துடன் வர வேண்டும். வகுப்புகள் காலை 9 மணி முதல் 10 மணி வரை தொடங்கி முதல் இரண்டு வாரங்களில் மதியம் வரை அனுமதிக்கப்படும்.
ஒரு பெஞ்சில் அதிகபட்சம் இரண்டு குழந்தைகள் அமரலாம். எந்தப் பள்ளியிலும் 1000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தால் ஒரு நேரத்தில் 25% குழந்தைகள் மட்டுமே வளாகத்தில் இருக்க வேண்டும். நோய் தொற்று மற்றும் அறிகுறிகள் உள்ள குழந்தைகள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நல்ல காற்று சுழற்சி கொண்ட அறைகள் வகுப்புகளை எடுக்க வேண்டும் மற்றும் மின்விசிறிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் ஆயுத பூஜை கொண்டாட்டம் – சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
முடிந்தால், பள்ளிகள் திறந்த வெளியில் வகுப்புகள் எடுக்கலாம். ஒவ்வொரு பள்ளியின் சூழ்நிலையை பொறுத்து பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படலாம். வகுப்புகள் ஒவ்வொரு நாளும் சுத்தம் செய்யப்பட வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் கழிப்பறைகள் சுத்திகரிக்கப்பட வேண்டும். குழந்தைகள் தங்கள் வீடுகளில் இருந்து குடிநீர் கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.