தமிழகத்தில் ஆயுத பூஜை கொண்டாட்டம் – சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
தமிழகத்தில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழாவை தொடர்ந்து திருப்பூர் பொது மக்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
சிறப்பு பேருந்து:
ஆண்டுதோறும் வருடத்தின் இரண்டாம் பகுதி முழுவதும் பண்டிகை காலங்களே. தமிழகத்தில் .வரும், 14ம் தேதி ஆயுத பூஜை, 15ல் விஜயதசமி, அடுத்த இரு நாட்கள் சனி, ஞாயிறு விடுமுறை வருகிறது. எனவே வெளியூரில் தங்கி பணிபுரிபவர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று விழாவை கொண்டாடுவது வழக்கம். எனவே திருப்பூரில் இருந்து பயணிகள் வெளியூர் செல்ல வசதியாக சிறப்பு பேருந்து இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு – அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா பரவல் முதல் அலை மற்றும் இரண்டாம் அலை கோரத்தாண்டவம் ஆடியது தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நோய்த்தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டது. பொதுமக்கள் கூட்ட நெரிசலில் பயணம் செய்வதால் நோய் பரவும் விகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் கூட்ட நெரிசலில் பயணம் செய்வதை தடுக்க சிறப்பு பேருந்துகள் விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை ரயில் பயணிகள் கவனத்திற்கு – மின்சார ரயில்கள் ரத்து!
அதனை தொடர்ந்து 13ம் தேதி இரவு முதல், 16ம் தேதி இரவு வரை, 40 சிறப்பு பஸ் இயக்கப்படும் என கூறப்படுகிறது. இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது திருப்பூரில் இருந்து திருச்சி, திருவண்ணாமலை, மதுரை, தேனி, திருநெல்வேலி, சேலம், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், கும்பகோணம் பகுதிக்கு, 40 சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது. இது தவிர, தேவையான பஸ்கள் பணிமனையில் தயார் நிலையில் உள்ளது. கூட்டம் அதிகரித்தால், தேவைக்கேற்ப கூடுதல் பஸ்கள் இயக்கத்துக்கு கொண்டு வரப்படும் என கூறப்பட்டுள்ளது.