லேசான கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – எய்ம்ஸ் மருத்துவமனை!!
கொரோனா தொற்றின் அறிகுறி உள்ளவர்கள் சி.டி.ஸ்கேன் எடுக்க தேவையில்லை எனவும் அதனால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கொரோனா சோதனை:
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம் பொது முடக்கம் காரணமாக பலர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். ஒரு சிலர் நோய் தாக்கத்தால் பாதிக்கப்படுகின்றனர். பொதுவாக கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களுக்கு RT-PCR மூலமாக சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படும்.
TN Job “FB Group” Join Now
ஆனால் இந்த பரிசோதனை முடிவுகள் வர காலதாமதமாகும். மேலும் இதனை தனியார் மருத்துவமனைகளில் எடுத்தால் அதற்கான கட்டணமும் அதிகம் வசூலிக்கப்படுகிறது. அதனால் ஒரு சிலர் சோதனை முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள CT Scan முறையை பயன்படுத்துகின்றனர். இதனால் விரைவாக பரிசோதனை முடிவுகள் தெரிந்து விடும்.
நாடு தழுவிய முழு ஊரடங்கு மட்டுமே ஒரே தீர்வு – ராகுல் காந்தி பேச்சு!!
ஆனால் இந்த சிடி ஸ்கேன் பரிசோதனை உடலுக்கு ஆபத்து விளைவிக்கும் என எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகம் உள்ளவர்கள் வேறு வழி இல்லாமல் உடனடி முடிவுகளுக்கு இந்த பரிசோதனை செய்து கொள்ளலாம். ஆனால் நோயின் சிறிய அறிகுறிகள் மட்டுமே உள்ளவர்கள் இந்த முறை மூலமாக பரிசோதனை செய்வதினால் பாதிப்பு ஏற்படும்.
பேரிடர் காலத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கான கல்வி கட்டணம் குறைப்பு – நீதிமன்றம் உத்தரவு!!
ஒரு முறை சிடி ஸ்கேன் செய்தால் 300 முறை எக்ஸ்ரே எடுப்பதற்கு சமம். எனவே கொரோனா சிகிச்சையில் சி.டி. ஸ்கேன் மற்றும் பயோ மேக்கஸ் ஆகியவை தவறாக பயன்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாக பலருக்கு புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.