‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று – சீரியல் நிறுத்தம்? ரசிகர்கள் ஷாக்!
தற்போது ஹிந்தி மொழியில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் 4 நடிகர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
நாடு முழுவதும் தற்போது அதி தீவிரமாக பரவி கொண்டிருக்கும் கொரோனா பேரலை தொற்றினால் சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமா உலகை சேர்ந்த முன்னணி நடிகர்களான வடிவேலு, சத்யராஜ், அருண் விஜய், இசையமைப்பாளர் தரன் ஆகியோருடன் நடிகைகள் திரிஷா, மீனா ஆகியோரும் இந்த நோய் தொற்று தாகத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். இந்த கொரோனா தொற்று தற்போது சின்னத்திரை பிரபலங்களையும் கூட விட்டுவைக்கவில்லை.
ஜனவரி 26 வரை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை – கொரோனா பரவல் எதிரொலி!
அதாவது, தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வெற்றியடைந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் தற்போது தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ‘பாண்டியா ஸ்டோர்ஸ்’ என்ற பெயரில் ஹிந்தி மொழியில் தயாரிக்கப்பட்டு வரும் சீரியல் தற்போது படு ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படி இருக்க ‘பாண்டியா ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடித்து வரும் நடித்து வரும் நடிகர்கள் சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 26ம் தேதிக்கு முன் DA நிலுவைத் தொகை? முக்கிய தகவல் இதோ!
இந்த தகவலை உறுதிப்படுத்திய ‘பாண்டியா ஸ்டோர்ஸ்’ சீரியல் தயாரிப்பாளர் சுஞ்சோய் வாத்வா, நடிகர்கள் ஆலிஸ் கௌஷிக், அக்ஷய் கரோடியா, சிம்ரன் புதாருப் மற்றும் மோஹித் பார்மர் ஆகியோர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இப்போது கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர்கள் தனிப்படுத்தலில் இருப்பதாகவும், அவர்களது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதை தொடர்ந்து தற்போது ‘பாண்டியா ஸ்டோர்ஸ்’ ஷூட்டிங் ஸ்பாட் முழுவதிலும் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.