தீவிரமடையும் கொரோனா, 3 நாட்களுக்கு ஊரடங்கு அமல் – மாநில அரசு நடவடிக்கை!
கொரோனா மூன்றாவது அலை எதிரொலியாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில் மேற்கு வங்கத்தின் முக்கிய நகரத்தில் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு
நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை தொற்று ஓய்ந்திருக்க கூடிய சூழலில் பல்வேறு மாநிலங்களில் தற்போது தான் அனைத்து வகையான சேவைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் கொரோனா புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக ஏற்றத்தை சந்தித்து வருகிறது. இந்த புதிய வழக்குகளின் அதிகரிப்புக்கு மத்தியில், மேற்கு வங்கத்தின் தெற்கு பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சோனார்பூர் நகராட்சி பகுதியில் மூன்று நாட்களுக்கு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – ஏகப்பட்ட முறைகேடுகள்! தீவிர ஆய்வு!
மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சோனார்பூர் பகுதியில் இதுவரை 19 கட்டுப்பாட்டு மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்போது, 3 நாட்கள் ஊரடங்குக்கு மத்தியில் மருந்து, பால், ரேஷன், மின்சாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் சோனார்பூர் நகராட்சியில் வரும் அக்.30ம் தேதியன்று நோய் தொற்று நிலைமையை மதிப்பாய்வு செய்து இந்த கட்டுப்பாடுகளை தொடரலாமா என்று அதிகரிகள் முடிவு செய்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை : தமிழக அரசு போக்குவரத்து துறையின் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
குறிப்பாக, சமீபத்தில் நடந்து முடிந்த துர்கா பூஜை பண்டிகைக்கு பிறகு தான் அப்பகுதியில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்திருப்பதாக சுகாதாரத் துறை தரவுகள் தெரிவிக்கிறது. இதற்கிடையில் மேற்கு வங்கத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக 800க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளது. அதனால் கொரோனா புதிய வழக்குகள் மற்றும் இறப்புகள் குறித்து உடனடியாக மறுஆய்வு செய்யுமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.