செப்டம்பர் 7 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
உத்தரகண்ட் மாநிலத்தில் இன்றுடன் (ஆகஸ்ட் 31) முடிவடையவிருந்த முழு ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகளை இன்னும் ஒரு வாரத்திற்கு, அதாவது செப்டம்பர் 7 ஆம் தேதி வரை நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு
உத்தரகண்ட் மாநிலம் முழுவதும் தற்போது கொரோனா 2 ஆம் அலை பரவல் குறைந்து கொண்டிருக்க கூடிய சூழலில் கொரோனா 3 ஆம் அலை தடுப்பு நடவடிக்கைகளாக முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அம்மாநிலத்தில் கடந்த மே மாதம் முதல் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்து, ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்தது.
செப்.1 முதல் சுங்க கட்டணம் உயர்வு அமல் – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
இந்த பொது முடக்கத்தின் போது அரசு பல வகையான செயல்பாடுகளுக்கு அனுமதி கொடுத்துள்ளது. அதன் கீழ் கடைகள், மால்கள், பூங்காக்கள், சுற்றுலா தலங்கள், பள்ளிகள் அனைத்தும் மீண்டுமாக செயல்பட துவங்கியுள்ளது. என்றாலும் பொது இடங்களில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முகக்கவசங்களை அணிவது போன்ற கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் உத்தரகண்ட் மாநிலத்தில் கொரோனா 3 ஆம் அலை தடுப்பு நடவடிக்கைகளாக விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை இன்னும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன் கீழ் இன்றுடன் (ஆகஸ்ட் 31) முடிவடைந்த கட்டுப்பாடுகள், செப்டம்பர் 7 ஆம் தேதி காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.