கடைகள் இரவு 11 மணிவரை திறக்க அனுமதி – மாநில அரசின் ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பு!
மஹாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது நிலவி வரும் கொரோனா தொற்று சூழலை ஆய்வு செய்த முதல்வர் ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகளில் இருந்து இன்னும் சில கூடுதல் தளர்வுகளை அளிப்பதாக அறிவித்துள்ளார்.
தளர்வுகள் அறிவிப்பு
கொரோனா நோய் தொற்று பாதிப்பானது குறைந்து வரும் சூழலில் மஹாராஷ்டிரா மாநில அரசு முழு ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகளில் இருந்து மேலும் சில தளர்வுகளை அளித்துள்ளது. அந்த வகையில் அம்மாநில அரசு, இன்று (அக்.19) முதல் உணவகங்கள் அனைத்தும் காலை 12 மணி வரை திறந்திருக்க அனுமதி கொடுத்துள்ளது. அதே நேரத்தில் மற்ற நிறுவனங்கள் மற்றும் கடைகள் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.
அக்.25 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – விரிவான வழிமுறைகள் வெளியீடு!
தவிர மஹாராஷ்டிரா மாநிலத்தில் வரும் அக்டோபர் 22ம் தேதி முதல் பொழுதுபோக்கு பூங்காக்கள் மீண்டும் மீண்டும் திறக்கப்பட உள்ளது. இருப்பினும், பொழுதுபோக்கு பூங்காக்களில் நீர் விளையாட்டுகளுக்கு மட்டும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மஹாராஷ்டிரா மாநில பணிக்குழு கூட்டத்திற்கு பிறகு முதல்வர் உத்தவ் தாக்கரே கூறுகையில், ‘நாங்கள் மெதுவாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துகிறோம். அந்த வகையில் அக்டோபர் 22 முதல் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்படும்.
தமிழகத்தில் நாளை (அக்.20) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – அறிவிப்பு வெளியீடு!
அதே போல உணவகங்கள் மற்றும் கடைகளின் வேலை நேரத்தை நீட்டிக்க தொடர்ந்து கோரிக்கை எழுந்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார். இதை தொடர்ந்து உணவகங்கள் மற்றும் கடைகளுக்கான செயல்பாட்டு நேரத்தை நீட்டிப்பதற்கான வழிகாட்டுதல்களை தயாரிக்குமாறு முதல்வர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இப்போது கொரோனா தொற்றுநோயின் 2ம் அலை ஓய்ந்திருந்தாலும், மூன்றாவது அலைக்கான ஆபத்து இருப்பதால் முகக்கவசங்களை அணிவது மற்றும் சமூக இடைவெளியை பராமரிப்பது போன்ற நெறிமுறைகளை பின்பற்றுவது மிகவும் முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.