அக்.25 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – விரிவான வழிமுறைகள் வெளியீடு!

0
அக்.25 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு - விரிவான வழிமுறைகள் வெளியீடு!
அக்.25 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு - விரிவான வழிமுறைகள் வெளியீடு!
அக்.25 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – விரிவான வழிமுறைகள் வெளியீடு!

ஒடிசாவில் மாநிலத்தில் வரும் அக்டோபர் 21 மற்றும் 25ம் தேதிகளில் முறையே 11 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு:

ஒடிசா மாநிலத்தில் கொரோனா தொற்றின் பாதிப்புகள் குறைந்து உள்ளது. இதனால் பள்ளிகள் திறப்பதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 21 மற்றும் 25 ஆம் தேதிகளில் முறையே 11 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்குவதற்கு பள்ளி மற்றும் வெகுஜன கல்வித் துறை நேற்று அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, பள்ளிகளில் தூய்மையை பராமரிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 8 ம் வகுப்பு மாணவர்களுக்காக அக்டோபர் 17 முதல் 24 வரை பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகக் குழுக்களுக்கிடையே கூட்டம் நடைபெறும்.

தமிழகத்தில் நாளை (அக்.20) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – அறிவிப்பு வெளியீடு!

மேலும், பள்ளிகள் திறப்பதற்கு ஒரு நாள் முன்னதாக மாவட்ட கல்வி அலுவலரை (DEO) தொடர்பு கொள்ளுமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். முதல் இரண்டு நாட்களுக்கு வகுப்புகள் இருக்காது, ஏனெனில் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடல்களை நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சிறப்பு தேர்வு நடைபெறும். அரசு உத்தரவின்படி, 8ம் வகுப்பிற்கு காலை 9 மணி முதல் மதியம் 12:30 வரையும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் மதியம் 1:30 மணி வரையும் வகுப்புகள் நடைபெறும்.

பள்ளிகளில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள்:
  • சமூக இடைவெளியை உறுதி செய்வதற்கும் மற்றும் வளாகத்தின் நுழைவாயிலில் வரிசை நிர்வகிப்பதற்கும் தரையில் 6 அடி இடைவெளியுடன் குறிப்பிட்ட அடையாளங்கள் செய்யப்பட வேண்டும்.
  • வகுப்பறைகளுக்குள், மாணவர்கள் பாதுகாப்பான தூரங்களில் மாற்று மேசைகளில் உட்கார வைக்கப்பட வேண்டும்.
  • ஆசிரியர்கள் அறையிலும் மற்றும் உணவருந்தும் இடம், நூலகம் போன்ற இடங்களிலும் தகுந்த சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டும்.

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோர் கவனத்திற்கு – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

  • பள்ளி மைதானங்களில் போதிய இட வசதி இருப்பின் மாணவர்களுக்கு பாதுகாப்பு நெறிமுறைகளை கருத்தில் கொண்டு வகுப்புகளை அங்கு நடத்தலாம்.
  • அனைத்து கழிப்பறைகள் மற்றும் காய் கழுவும் இடங்களிலும் ஹாண்ட்வாஷ் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான கை சுத்திகரிப்பான் ஒவ்வொரு வகுப்பறையிலும் கட்டாயமாக இருக்க வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!