தமிழகத்தில் நாளை (அக்.20) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில் அங்கங்கே நடைபெறும் மின்சார விபத்துகளை தடுக்க பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உடுமலை பகுதியில் நாளை (அக்.20) மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மின் தடை பகுதிகள்:
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. மேலும் அனைத்து மாவட்டங்களிலும் மாதம் ஒரு முறை மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுமாறு மின்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதனால் பல மாவட்டங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் பகுதி வாரியாக நடைபெற்று வருகிறது. மேலும் தற்போது மழைக்காலம் என்பதால் மின்சார விபத்துகள் அதிகம் ஏற்படாத வண்ணம் மின்சார பணிகள் நடைபெற்று வருகிறது.
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோர் கவனத்திற்கு – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
அதனால் குறிப்பிட்ட பகுதிகளில் மின்சாரம் தடைபடும் என அறிவிப்பு வெளியிடப்படும். அதன் படி உடுமலையை அடுத்துள்ள இந்திரா நகர், மடத்துக்குளம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப்பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (அக்.20) மின்சார தடை ஏற்பட இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
TCS, Infosys, Wipro & HCL நிறுவனங்களில் 1.5 லட்சம் பேருக்கு வேலை – புதியவர்களுக்கு அரிய வாய்ப்பு!
அதன்படி இந்திரா நகர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட சின்னப்பன்புதூர், ராஜாவூர், ஆவல்குட்டை, சேரன் நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிட்டாபுரம், துங்காவி, ராமேகவுண்டன்புதூர் மெட்ராத்தி ஆகிய பகுதிளிலும், மடத்துக்குளம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட கணேசபுரம், கழுகரை, கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், வேடபட்டி பகுதியிலும் மின் விநியோகம் இருக்காது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.