இன்று முதல் கடைகள், மால்கள் திறப்பு; ஊரடங்கில் முழுமையான தளர்வுகள் – வங்கதேச அரசு உத்தரவு!
வங்கதேசத்தில் கொரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த தடைகள் அனைத்தும் பாதிப்பு முழுமையாக குறைந்துள்ளதை அடுத்து நீக்கப்படுவதாக அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் சில நெறிமுறைகளை கடைபிடிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.
தடை நீக்கம்:
வங்கதேசத்தில் கடந்த ஜூன் மாதம் கோவிட் -19 தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது, இதனால் ஜூலை 1ம் தேதி முதல் ஜூலை 14ம் தேதி வரை நாடு முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர், ஜூலை 21ம் தேதி பக்ரீத் பண்டிகைக்காக ஒரு வாரம் கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியது. பின்னர், ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை கடுமையான கட்டுப்பாடுகளுடன் நோய் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு நீடிக்கப்பட்டது. இதன் விளைவால் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் ஆகஸ்ட் 12ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!
வங்காளதேச அமைச்சரவை கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்குவதாக அரசு அறிவித்துள்ளது. இதனால், வணிக வளாகங்கள், வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களும் திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவித்தது. காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை வணிக வளாகங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அலுவலகங்கள் மற்றும் பொது போக்குவரத்துகளில் பின்பற்ற சில நெறிமுறைகளை அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன்படி, பேருந்துகள் மற்றும் ரயில்களில் 50% பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும். ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் 50% வாடிக்கையாளருடன் அனுமதிக்கப்படும். ஆகஸ்ட் 31 வரை கல்வி நிறுவனங்கள் திறப்பது குறித்து எந்த அறிவிப்பும் தெரிவிக்கவில்லை. அலுவலகங்கள் அரசு அறிவித்துள்ள சுகாதார வழிகாட்டுதல்களை கட்டாயமாக பராமரிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.