பஞ்சாபில் ஜூலை 26 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு!
பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருவதையடுத்து ஜூலை 26 ஆம் தேதி முதல் 10, 11, மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான நேரடி வகுப்புகளை துவங்க அரசு அனுமதி கொடுத்துள்ளது.
பள்ளிகள் திறப்பு
கொரோனா 2 ஆம் அலை தாக்கம் வெகுவாக குறைந்துள்ள பட்சத்தில் பஞ்சாப் மாநிலத்தில் மேலும் சில கூடுதல் தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த தளர்வுகளின் ஒரு பகுதியாக ஜூலை 26 ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட உள்ளதாக முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் தலைமையிலான பஞ்சாப் மாநில அரசு அறிவித்துள்ளது. இது தவிர பொது மக்கள் அதிகம் கூடும் உட்புறக் கூட்டங்களில் 150 கலந்து கொள்ளலாம் எனவும், வெளிப்புற கூட்டங்களில் 300 பேர் வரை கலந்து கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
Airtel, BSNL மற்றும் Jio பிரீமியம் ஃபைபர் திட்டம் – அதிக பலன்கள்!!
முன்னதாக பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 0.3% ஆக குறைந்து வருவதை கவனத்தில் கொண்ட அரசு, பத்தாம் முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை மீண்டுமாக திறக்க அனுமதித்துள்ளது. மேலும் பள்ளிகளில் நேரடி வகுப்புகளை எடுக்க வரும் ஆசிரியர்கள் முழுமையான தடுப்பூசிகளை எடுத்திருக்க வேண்டும் எனவும் மாணவர்கள் அனைவரும் அவர்களது பெற்றோரின் அனுமதியுடன் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பு நிலைமை கட்டுப்பாட்டில் இருந்தால், மீதமுள்ள வகுப்புகளுக்கும் ஆகஸ்ட் 2 முதல் பள்ளிகளை திறக்க அனுமதிக்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதனிடையே முழு ஊரடங்கு தளர்வாக, சமூகக் கூட்டங்கள், பார்கள், சினிமா அரங்குகள், உணவகங்கள், ஸ்பாக்கள், நீச்சல் குளங்கள், பயிற்சி மையங்கள், விளையாட்டு வளாகங்கள், ஜிம்கள், மால்கள், அருங்காட்சியகங்கள், உயிரியல் பூங்காக்கள் போன்றவை 50% திறனுடன் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.