சென்னையில் தீவிரமடையும் கொரோனா – 600 கட்டுப்பாட்டு பகுதிகள் அறிவிப்பு!!
தமிழகத்தில் கொரோனாவின் 2வது அலை பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் அதிவேகமாக மக்களிடையே கொரோனா நோய்த்தொற்று பரவி வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் கட்டுப்பாட்டுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு பகுதிகள்:
தமிழகத்தில் கடந்த மாதம் முதல் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக நேற்று (ஏப்ரல் 8) புதிய கட்டுப்பாடு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டன. மேலும் இந்த கட்டுப்பாடுகள் நாளை (ஏப்ரல் 10) முதல் அமலுக்கு வரவுள்ளது. அதுமட்டுமல்லாமல் தற்போது தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி தடுப்பூசி திருவிழாவை நடத்த மாநில முதலமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
TN Job “FB Group” Join Now
மேலும் தமிழகத்தில் மாவட்டந்தோறும் கொரோனா பரவலை கண்டறிய கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்டங்களில் எந்த பகுதியில் கொரோனா நோய்த்தொற்று மிக அதிகமான அளவில் இருந்து வருகிறதோ அந்த பகுதியை நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதனால் அந்த பகுதியில் இருந்து மக்கள் வெளியேறவும் முடியாது, உள்ளே செல்லவும் முடியாது.
சென்னை பல்கலை பட்டமளிப்பு விழா – 1.38 லட்சம் பேருக்கு பட்டம்!!
மேலும் அவர்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது அந்த வகையில் சென்னையில் கொரோனா நோய்த்தொற்று அதிகமாக காணப்படும் சுமார் 600 பகுதிகளை கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவித்துள்ளனர். வில்லிவாக்கம், வசந்த காலனி, சூளைமேடு உள்ளிட்ட பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.