சென்னை பல்கலை பட்டமளிப்பு விழா – 1.38 லட்சம் பேருக்கு பட்டம்!!
சென்னை பல்கலைக்கழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் மத்தியில் நேற்று (ஏப்ரல் 8) பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழா கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் நடைபெற்றது.
சென்னை பல்கலைக்கழகம்:
கடந்த ஆண்டு கொரோனா பரவலால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் பொதுமுடக்கம் காரணமாக மூடப்பட்டது. இந்நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடத்தப்பட்டது. பின்பு கடந்த ஆண்டு இறுதியில் தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வந்தது. இதன் காரணமாக இந்த ஆண்டு தொடக்கத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் துவக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் பள்ளி மாணவர்களிடையே கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வந்தது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் தற்போது மீண்டும் பள்ளி (12ம் வகுப்பு தவிர்த்து) மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. இதற்கு மத்தியில் நேற்று (ஏப்ரல் 8) சென்னை பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!
அதன்படி அங்கு நேற்று (ஏப்ரல் 8) 163வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழா கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை ஐஐடி இயக்குனர் ராமமூர்த்தி பாஸ்கர் கலந்து கொண்டார். இந்த பட்டமளிப்பு விழாவில் சுமார் 1.38 லட்ச பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. அதில் 872 பேருக்கு நேரலையில் பட்டம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டமளிப்பு விழா கொரோனாவிற்கு எதிரான தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நடைபெற்றது.