நாடு முழுவதும் ஒரே நாளில் 38,949 பேருக்கு கொரோனா – 542 பேர் உயிரிழப்பு!
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் புதிதாக 38,949 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 542 பேர் உயிரிழந்து உள்ளனர்.
கொரோனா பாதிப்பு:
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் கொரோனா பரவல் 4 லட்சத்தை நெருங்கிய நிலையில் தற்போது 40 ஆயிரத்திற்கு கீழ் வந்துள்ளது.
ஆகஸ்ட் 1 வரை பகுதிநேர ஊரடங்கு நீட்டிப்பு – ஒடிஷா அரசு உத்தரவு!
கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 38,949 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,10,26,829 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 542 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் இதுவரை கொரோனா நோய்க்கு பலியானவர்கள் எண்ணிக்கை 4,12,531 ஆக உயர்ந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 40,026 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,01,83,876 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டு தற்போது 4,30,422 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை 39,53,43,767 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.