ஆகஸ்ட் 1 வரை பகுதிநேர ஊரடங்கு நீட்டிப்பு – ஒடிஷா அரசு உத்தரவு!
ஒடிசா மாநிலத்தில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அங்கு ஜூலை 16ம் தேதியான இன்று முதல் மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதாக அரசு உத்தரவிட்டுள்ளது.
இரவு ஊரடங்கு:
ஜூலை 15ம் தேதியான நேற்றைய நிலவரப்படி ஒடிசா மாநிலத்தில் 2,110 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,47,859 ஆக அதிகரித்துள்ளது. அதில் 9,20,646 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 66 பேர் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். மேலும், தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,861 ஆக அதிகரித்துள்ளது.
திருத்தணி முருகன் கோவிலில் 50 காலிப்பணியிடங்கள் – இதுவரை 2,500 பேர் விண்ணப்பம்!
மாநிலத்தில் உள்ள தொற்று பாதிப்பு நிலவரத்தின் படி, இரண்டு வகைகளாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. அங்குல், பர்கர், பாலாங்கிர், தெங்கனல், தியோகர், கஜபதி, கஞ்சம், ஜார்சுகுடா, காந்தமால், கலஹந்தி, கியோஞ்சர், கோராபுட், மல்கங்கிரி, நபரங்பூர், நுவாபாடா, ராயபாடா, சாம்பார் ஆகிய இடங்களில் 20 மாவட்டங்கள் ஏ பிரிவில் உள்ளது. பாலசூர், பத்ரக், கட்டாக், ஜஜ்பூர், ஜகத்சிங்க்பூர், கேந்திரபாதா, கோர்தா, மயூர்பஞ்ச், நாயகர் மற்றும் பூரி ஆகிய 10 மாவட்டங்கள் பி பிரிவில் உள்ளது.
ஏ பிரிவு மாவட்டங்களில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்த நிலையில் இருக்க அனுமதிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. பி பிரிவு மாவட்டங்களில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. வெள்ளி மாலை 5 மணி முதல் திங்கள் காலை 6 மணி வரை வார இறுதி ஊரடங்கு அமலில் இருக்கும். ஆகஸ்ட் 1 வரை அனைத்து கல்வி நிறுவனங்கள், மத இடங்கள், பூங்காக்கள் மற்றும் மால்கள் மூடப்படும் என்று அறிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
மாநிலங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படும். ஆனால் மாநிலத்திற்கும் பயணிக்க தடை இல்லை. பூரி நகரத்திற்கு பஸ் மூலம் பொது போக்குவரத்து ஜூலை 25 நள்ளிரவு வரை நிறுத்தப்படும். டாக்ஸி மற்றும் ஆட்டோ ரிக்ஷா சேவைகள் அனைத்து மாவட்டங்களிலும் மீண்டும் தொடங்கும். அனைத்து அதிகாரபூர்வ கூட்டங்களும் அதிகபட்சம் 100 நபர்களுடன் கலந்து கொள்ளலாம். உடல்நலக் குறைவு உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அத்தியாவசிய மற்றும் சுகாதார நோக்கங்களைத் தவிர வெளியில் செல்ல வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.