இந்தியாவில் ஒரே நாளில் 3,780 பேர் பலி – 3,82,315 பேருக்கு கொரோனா!!
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. அதனால் கடந்த 24 மணி நேரத்தில் 3,82,315 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று:
இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் ஒவ்வொரு நாளும் 4 லட்சம் வரை புதிய பாதிப்பு பதிவு செய்யப்படுகிறது. பலி எண்ணிக்கையும் ஒரு நாளைக்கு 3 ஆயிரத்துக்கும் மேல் உள்ளது. பல மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. போதுமான அளவு ஆக்சிஜன் இல்லாததால், நோயாளிகள் பலர் இறக்க கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தவர்கள், பலியானவர்கள், சிகிச்சை பெறுபவர்கள், இறப்பு வீதம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு – எய்ம்ஸ் இயக்குனர் வலியுறுத்தல்!!
அந்த அறிக்கையின் படி, கடந்த ஒரு நாளில் நாடு முழுவதும் 3,82,315 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,06,65,148 ஆக உயர்ந்ததுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,780 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி பலி எண்ணிக்கை 2,26,188 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்றிலிருந்து ஒரே நாளில் 3,38,439 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,69,51,731 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 34,87,229 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனடிப்படையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் சதவிகிதம் 82.91% ஆகவும், உயிரிழந்தோர் சதவிகிதம் 1.09% ஆகவும், சிகிச்சை பெறுவோர் சதவிகிதம் 16.87% ஆகவும் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 16,04,94,188 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்