நாடு முழுவதும் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு – எய்ம்ஸ் இயக்குனர் வலியுறுத்தல்!!
இந்தியாவில் கொரோனா 3ம் அலை பாதிப்பு இருக்கும் என்பதால் குறைந்தது 2 வராங்களுக்கு நாடு தழுவிய முழு ஊரடங்கு அவசியம் என்று எய்ம்ஸ் மருத்துவ இயக்குனர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
கொரோனா 3ம் அலை:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. மத்திய மாநில அரசுகள் தடுப்பு பணிகளை விரைந்து செய்து வருகின்றன. இந்தியாவில் இன்று மட்டும் 3.82 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இதனால் மாநில அரசுகள் ஊரடங்குகளை அறிவித்து வருகின்றன. ஏற்கனவே பல மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்குகள் மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
இதை தொடர்ந்து அரசுகள் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு இலவசமாக அளிக்க திட்டமிட்டுள்ளது. இந்த கொரோனா தடுப்பூசி மூலம் வைரஸ் பரவலை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். ஆனலும் இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை பரவ வாய்ப்புள்ளதாக எய்ம்ஸ் மருத்துவ இயக்குனர் எச்சரித்துள்ளார். மேலும் இந்தியாவில் 2 வராங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவித்தால் மட்டுமே நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும் என கூறியுள்ளார்.
திமுக சட்டப்பேரவை தலைவராக முக ஸ்டாலின் தேர்வு – ஆட்சியமைக்க இன்று உரிமை கோரல்!!
இது குறித்து இந்தியா டுடே தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர் மருத்துவமனைகளில் சிகிக்சை முறையை மாற்றுதல், மருத்துவமனைகளை அதிகரித்தல், போதுமான படுக்கை வசதிகளை ஏற்படுத்துதல் மூலம் நோயாளிகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும் எனவும், கொரோனா தடுப்பூசி திட்டத்தை தீவிரமாக செயல்படுத்துவதன் மூலம் கொரோனா சங்கிலியை நம்மால் உடைக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்