திமுக சட்டப்பேரவை தலைவராக முக ஸ்டாலின் தேர்வு – ஆட்சியமைக்க இன்று உரிமை கோரல்!!
நேற்று (மே 4) சென்னை அறிவாலயத்தில் நடந்த எம்எல்ஏ.,க்கள் கூட்டத்தில், திமுக சட்டப்பேரவையின் குழு தலைவராக முக ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதன்படி முக ஸ்டாலின் இன்று (மே 5) கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார்.
திமுக தலைவர் ஸ்டாலின்
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக 159 இடங்களில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. சட்டமன்ற நடைமுறையின் படி, முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளவர், எம்எல்ஏக்கள் முன்னிலையில் சட்டமன்ற தலைவராக பொறுப்பேற்ற பின்னர், கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க கோர வேண்டும். அந்த வகையில், திமுக சட்டமன்ற எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை அறிவாலயத்தில் நேற்று (மே 4) நடைபெற்றது. அந்த கூட்டத்தில், திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
தமிழகத்தில் சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு? முக ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை !!
இந்த கூட்டத்தில் 125 திமுக எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். மாலை 6 மணிக்கு துவங்கி நடைபெற்ற திமுக சட்டப்பேரவை கூட்டத்தின் குழு தலைவராக முக ஸ்டாலின் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து திமுக எம்எல்ஏக்கள் ஸ்டாலின் அவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து அங்கிருந்து கிளம்பிய முக ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதையை செலுத்தியுள்ளார்.
மேலும் சட்டமன்ற தலைவராக முக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்ட பின்னர், எம்எல்ஏக்கள் அனைவரும் கையெழுத்திட்ட கடிதத்தை எடுத்துக்கொண்டு, சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு இன்று (மே 5) செல்கிறார். அங்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் அவர்களை சந்தித்து, தமிழகத்தில் ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளார். தொடர்ந்து வரும் மே 7ஆம் தேதி முக ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவியேற்கிறார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்